உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 22, 2010

வெள்ள நிவாரணம் வழங்காவிட்டால் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்; விடுதலை சிறுத்தைகள் அறிவிப்பு

நெய்வேலி:

             நெய்வேலி புதுநகர் 27-வது வட்டம் தொழிலாளர் விடுதலை முன்னணி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நடந்தது.

            நகர அமைப்பாளர் முருகன் தலைமை தாங்கினார். கிழக்கு நகர செயலாளர் அன்பழகன், தெற்கு நகர செயலாளர் பாண்டியன், மேற்கு நகர செயலாளர் தணிகாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் திருமாறன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட செயலாளர் துரை.மருதமுத்து, நகர துணை செயலாளர்கள் சுரேஷ், பாட்ஷாபன்னீர், முருகன், ரமேஷ், பூசைமணி, புரட்சிபாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
 
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படன.

*வருகிற 26-ந் தேதி சென்னையில் நடைபெறும் தமிழர் இறையாண்மை மாநில மாநாட்டில் சுமார் 1000-க்கும் அதிகமான வாகனங்களில் பங்கெடுப்பது.

*இலங்கை குடியிருப்பு பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரணத்தொகை அளிக்காவிட்டால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது.

*கட்சி உறுப்பினர்கள் சேர்ப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
முடிவில் ராசா நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior