உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 22, 2010

4 மாணவிகள் பலி எதிரொலி; தனியார் கம்பெனி மீது கல் வீச்சு- கண்ணாடி உடைப்பு; கடலூரில் பதட்டம்

 
4 மாணவிகள் பலி எதிரொலி;

 

 தனியார் கம்பெனி மீது 

 

 கல் வீச்சு- கண்ணாடி உடைப்பு;

 

 கடலூரில் பதட்டம்

கடலூர்:

            கடலூரில் நேற்று நடந்த வேன் விபத்தில் 4 மாணவிகள் பலியானார்கள். இதனால் 2 கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர். மாணவிகளை இழந்த பெற்றோர்களுக்கு தனியார் கம்பெனி நிர்வாகம் இதுவரை ஆறுதல் கூறவில்லை.

              ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று காலை ஏராளமானோர் ஒன்று திரண்டு தனியார் கம்பெனிக்கு சென்றனர். தனியார் கம்பெனியை பார்த்ததும் கோபத்தின் உச்சிக்கு சென்ற பொது மக்கள் ரோட்டோரம் கிடந்த கற்களை எடுத்து கம்பெனி மீது சரமாரியாக வீசினர். இதில் கம்பெனியின் கண்ணாடிகள் உடைந்தது. மேலும் கம்பெனியின் மேற்கூரையை பெயர்த்து எடுத்தனர். அதோடு அங்கு நின்ற வேன் மீது கல் வீசி தாக்கி உடைத்தனர். இதனால் பதட்டம் நிலவியது.

              தகவல் அறிந்ததும் கடலூர் ஆர்.டி.ஓ. முருகேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

1 கருத்துகள்:

  • டானியல் செல்லையா says:
    23 டிசம்பர், 2010 அன்று AM 1:51

    அன்புடைய பதிவருக்கு வணக்கம்,

    தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...

    அன்புடன்,

    வலைச்சரம் நிர்வாகம்.
    www.valaicharam.com

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior