உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 10, 2011

பண்ருட்டி முதியவரிடம் கோயம்பேடு பஸ் நிலையத்தில் டீ கொடுத்து ரூ.1 லட்சம் கொள்ளை?

பண்ருட்டி:

            பண்ருட்டி முதியவரிடம், சென்னை கோயம்பேட்டில் டீ கொடுத்து ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

               கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சின்னப்பேட்டையைச் சேர்ந்தவர் பரசுராமன் (55). இவர் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனது மகன், மகள் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர்களிடமிருந்து 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு, நேற்று அதிகாலை 5 மணிக்கு பண்ருட்டி வருவதற்கு கோயம்பேட்டில் அரசு விரைவு பஸ்சில் ஏறினார். பஸ்சில் ஏறி உட்கார்ந்த பின், கேனில் டீ விற்றுக் கொண்டிருந்த நபரிடம் பரசுராமன் டீ வாங்கிக் குடித்தார். 

              சற்று நேரத்தில் மயங்கிய அவர், 9 மணியளவில் பண்ருட்டி பஸ் நிலையத்தில் பாதி மயக்கத்தில், கண்டக்டரால் இறக்கி விடப்பட்டார். அப்போது அவர் வைத்திருந்த பணப்பை காணாமல் பாயிருப்பது கண்டு திடுக்கிட்டார். பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரசுராமன் நடந்த விவரங்களை பண்ருட்டி குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனிடம் தெரிவித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior