உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 10, 2011

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் தொல்காப்பிய மெய்பாட்டியல் அடிப்படையில் சங்க இலக்கியங்களை காட்சி படிம விளக்க நிகழ்ச்சி

விருத்தாசலம் : 

           விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் தொல்காப்பிய மெய்பாட்டியல் அடிப்படையில் சங்க இலக்கியங்களை காட்சி படிமமாக விளக்கும் நிகழ்ச்சி நடந்தது.

              விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் தமிழ் துறை சார்பில் தொல்காப்பிய இலக்கியவியல் கொள்கைகளும் கோட்பாடுகளும் என்ற தலைப்பில் 10 நாள் பயிலரங்கம் நடந்து வருகிறது. நேற்று நடந்த பயிலரங்கத்தில் முனைவர் ரகுராமன் குழுவினர் தொல்காப்பிய மெய்பாட்டியல் அடிப்படையில் சங்க இலக்கியங்களை காட்சி படிமமாக விளக்கினர்.

               இசைப்பள்ளி ஆசிரியர் வானதி ரகுராமன் சங்கல இலக்கியங்களை பாடலாக பாட, சென்னை பல்கலைக்கழக நடன பேராசிரியர் லட்சுமி பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி மாணவர்களுக்கு விளக்கினார். நிகழ்சியில் கல்லூரி முதல்வர் மனோன்மணி, தமிழ்த் துறைத் தலைவர் முத்தழகன், பேராசிரியர்கள் தண்டபாணி, கலாவதி, பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior