உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 10, 2011

சிதம்பரத்தில் 7-வது புத்தகக் கண்காட்சி நாளை தொடக்கம்

சிதம்பரம்:

             சிதம்பரத்தில் அரிமா, அரிவையர் மற்றும் லியோ சங்கங்கள் இணைந்து 7-வது புத்தகக் கண்காட்சியை அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல கலையரங்கில் இம்மாதம் 11-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடத்துகிறது.  

இது குறித்து அரிமா சங்கத் தலைவர் ஆர்.தர்பாரண்யன் தெரிவித்தது: 

               இக்கண்காட்சியில் 48 ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. கண்காட்சியை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராமநாதன் தொடங்கி வைக்கிறார்.  2-ம் துணைநிலை கவர்னர் ஆர்.எம்.சுவேதகுமார், பொறியியல் புல முதல்வர் பி.பழனியப்பன், மாவட்ட ஆலோசகர் கே.கண்பதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.  

              ஸ்ரீராமகிருஷ்ண மடம், நேதாஜி பப்ளிகேஷன்ஸ், கீதா பப்ளிகேஷன்ஸ், மதர் இந்தியா பப்ளிகேஷன்ஸ் கணியத்தணிவ் சாப்ட்வேர் நிறுவனம், அருண் புக் ஹவுஸ், ராம்கோ புத்தக நிலையம், லியோ புக் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பதிப்பகங்கள் பங்கேற்கின்றன.  தினமும் மாலை 3.30 மணி முதல் 9 மணி வரையும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் 9 மணி வரையும் கண்காட்சி நடைபெறுகிறது.  
 
              கண்காட்சி நுழைவுக் கட்டணம் ரூ.5. மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது. கண்காட்சியில் பங்கேற்பவர்களில் ஒருவருக்கு தினந்தோறும் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும்.  தினந்தோறும் நகரில் உள்ள பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தினந்தோறும் மாலை நேரத்தில் ஆட்சியர், எஸ்.பி., கோட்டாட்சியர், டிஎஸ்பி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட பிரமுகர்களில் ஒருவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகின்றனர் என ஆர்.தர்பாரண்யன் தெரிவித்தார்.  

             அப்போது துணை கவர்னர் ஆர்.எம்.சுவேதகுமார், புத்தக கண்காட்சி குழுத் தலைவர் ஜி.வெங்கடேசன், துணைத் தலைவர் ஆர்.செந்தில்நாதன், செயலர் கே.சண்முகசுந்தரம், பொருளாளர் கே.ரமேஷ்சந்த், அரிமா சங்கச் செயலர் எம்.ஆர்.ராஜமாணிக்கம், பொருளாளர் டி.வி.கே.பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior