உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 10, 2011

பண்ருட்டியில்அறுவடை தாமதம் முந்திரி விலை உயர்வு

பண்ருட்டி : 
 
            முந்திரி அறுவடை தாமதம் காரணமாக, முந்திரி பயிர் விலை உயர்ந்தது. தமிழகத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி, கன்னியாகுமரி, தேனி மாவட்டத்தில் முந்திரி உற்பத்தி கடந்தாண்டை விட கணிசமாக குறைந்தது. இதன் காரணமாக, கடந்தாண்டு, 80 கிலோ எடை கொண்ட முந்திரி கொட்டை, 3,600 ரூபாய் வரை விற்றது. தற்போது படிப்படியாக உயர்ந்து கடந்த ஆகஸ்டில், 5,000 ரூபாய் வரையும், அரசு இலவச பொங்கல் பொருட்கள் அறிவிப்பு காரணமாக, 6,000 ரூபாயாகவும் உயர்ந்தது. 

              இதன் காரணமாக, முந்திரி பயிர் ரகங்கள் ஒரு கிலோவிற்கு, 30 முதல், 50 ரூபாய் விலை உயர்ந்தது. புதிய முந்திரி தேனி, நாகர்கோவிலில் ஜனவரியில் துவக்கம் முதல் அதிகளவில் அறுவடைக்கு வரும் என வியாபாரிகள் முகாமிட்டனர். ஆனால், மழை மற்றும் அறுவடை தாமதம் காரணமாக, 20 நாட்கள் தள்ளிப் போனதால் முந்திரி வரத்து குறைந்தது.

                 இருப்பில் உள்ள 80 கிலோ முந்திரி கொட்டை 6,700ம், புதிய ஈர ரக கொட்டை, 7,200ம் விற்பனையாகிறது. முந்திரி பயிர் ஒரு கிலோ, 240 ரகம், 420 ரூபாயும், 320 ரகம், 380, ஜே.எச்.,ரகம், 340ல் இருந்து 370, எஸ்.ரகம், 330ல் இருந்து 370, பட்ஸ் ரகம், 310லிருந்து 345, எல்.டபிள்யூ.பி.300லிருந்து 330, எஸ்.டபிள்யூபி ரகம், 225லிருந்து 260, ஆவரேஜ், 310லிருந்து 330 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் இரு மடங்கு கொட்டை விலை உயர்ந்த நிலையில், முந்திரி பயிர் விலை மட்டும் உலகச் சந்தையில் உயராததால் ஏற்றுமதி முற்றிலும் பாதித்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior