உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 10, 2011

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கல்

கடலூர் : 

         பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட ஹால் டிக்கெட் நாளை (11ம் தேதி) வரை வழங்கப்படுகிறது.

அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

             மார்ச் மாதம் துவங்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் நாளை 11ம் தேதி மாலை வரை வழங்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் வழங்கப்படுகிறது.

          விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திண்டிவனம் வால்டர் ஸ்கேடர் மேல்நிலைப் பள்ளியிலும், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி, காரைக்கால் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் வழங்கப்பட்டு வருகிறது.

              தனித் தேர்வர்கள் ஹால் டிக்கெட் பெற்றதும், அதில் அச்சிடப்பட்டுள்ள பெயர், பிறந்த தேதி, பதிவெண், தேர்வு மையம், தேர்வு எழுத வேண்டிய பாடங்கள், தேர்வு நாள் போன்ற விவரங்களை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் பிழை இருந்தாலோ அல்லது உரிய காலத்தில் விண்ணப்பித்து ஹால் டிக்கெட் கிடைக்க பெறாதவர்கள் அதற்குரிய ஆவணங்களுடன் 

கூடுதல் செயலர் (மேல்நிலை), 
அரசுத் தேர்வுகள் இயக்ககம், 
சென்னை - 6

                என்ற முகவரிக்கு தபால் மூலமோ அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம். தனித் தேர்வர்கள் முதல் தேர்வு அன்று தங்களது சுய முகவரியிட்ட 30 ரூபாய்க்கான தபால் தலை ஒட்டிய பெரிய கவர் ஒன்றை தேர்வு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு துணை இயக்குனர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior