உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 07, 2011

1,788 கோடி யூனிட் மின்னுற்பத்தி: என்.எல்.சி. சாதனை


நெய்வேலி:
 
           நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. அனல் மின் நிலையங்களில் (2010-11) முடிவடைந்த நிதியாண்டில் 1,788 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.  
 
             சுரங்கங்களில் இருந்து 231 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுத்தும் சாதனைப் படைத்திருப்பதாக அந்நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 இதுதொடர்பாக என்.எல்.சி. மக்கள் தொடர்புத் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  
 
              நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தில் 3 சுரங்கம், 3 அனல்மின் நிலையங்களும், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு சுரங்கம், அனல்மின் நிலையமும் உள்ளது.  மேற்கண்ட சுரங்கங்களிலிருந்து கடந்த நிதியாண்டில் (2010-11) 577 கோடி கனஅடி மேல் மண் நீக்கப்பட்டு, 231 லட்சத்து 44 ஆயிரத்து 200 டன் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கப்பட்டுள்ளது.  இது கடந்த நிதியாண்டை (2009-10) காட்டிலும் 3.61 சதவீதம் அதிகமாகும்.  
 
            அதேபோன்று மின்னுற்பத்தியை பொறுத்தவரை, அனல்மின் நிலையங்களில் இருந்து 1,787 கோடியே 95 லட்சத்து 40 ஆயிரம் யூனிட் மின்னுற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இது கடந்த நிதியாண்டை (2009-10) காட்டிலும் 1.27 சதவீதம் அதிகமாகும்.  மின் சக்தி ஏற்றுமதியை பொறுத்தவரை, இந்த மின் நிலையத்தின் அனல்மின் நிலையங்களில் இருந்து 1,496 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரம் யூனிட் மின்சாரத்தை ஏற்றுமதி செய்து சாதனைப் படைத்துள்ளது. 
 
             இது 2009-10 நிதியாண்டை காட்டிலும் 0.96 சதவீதம் அதிகமாகும்.  மேலும் என்.எல்.சி. 2-ம் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதால் விரைவில் இப்புதிய மின் நிலையத்திலும் மின்னுற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior