உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 07, 2011

கடலூர் மாவட்டத்தில் பலாப்பழ சீசன் தொடக்கம்


பலாப்பழப் பருவம் தொடங்கியதை யொட்டி, கடலூர் அருகே ராமாபுரத்தில் காய்த்துக் குலுங்கும் பலா மரம்.
 
கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் பலாப்பழப் பருவம் தொடங்கி விட்டது. பலாப்பழங்கள் சந்தைகளில் விற்பனைக்கு வரத் தொடங்கி இருக்கின்றன. 

             கடலூர் மாவட்டத்தில் 3,500 ஏக்கரில் பலா மரங்கள் உள்ளன. இதில் பண்ருட்டி தாலுகாவில் மட்டும் 2,400 ஏக்கரில் உள்ளன. மேலும் தனிப் பயிராக இல்லாமல், மற்ற பயிர்கள் உள்ள நிலங்களில், ஓரமாக நடப்பட்ட பலா மரங்கள், கடலூர் மாவட்டத்தில் அதிகமாக உள்ளன.  கடலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 75 ஆயிரம் டன் பலாப்பழங்கள் உற்பத்தி ஆகின்றன. வெளி மாநிலங்களுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  இந்த ஆண்டு பலாப்பழங்கள் அதிக அளவில் காய்த்து உள்ளன. தற்போது பலாப் பழங்கள் குறைந்த அளவில் வரத் தொடங்கி உள்ளன.  

                இவ்வாண்டு நோய்த் தாக்குதல் எதுவும் காணப்படவில்லை. எனவே விவசாயிகள் நல்ல மகசூலை எதிர்பார்க்கிறார்கள் என்று, வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள்.  

இது குறித்து வேளாண் தோட்டக் கலைத் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 

            "கடலூர் மாவட்டத்தில் 3,500 ஏக்கருக்கு மேல் பலா மரங்கள் உள்ளன. இந்த ஆண்டு நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த, முன்னேற்பாடாக பல விவசாயிகள் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட மரங்களில் மருந்து தெளித்து உள்ளனர்.  இதனால் நோய்த் தாக்குதல் இன்றி பலாமரங்கள் பெருமளவில் காய்த்து உள்ளன. ஏப்ரல் மாதத்தில் 25 சதவீதமும், மே மாதத்தில் 50 சதவீதமும், ஜூன் மாதத்தில் 25 சதவீதமும் அறுவடை செய்யப்படும்.  

             ஹெக்டேருக்கு சராசரியாக 40 முதல் 50 டன்கள் வரை பலாப்பழங்கள் கிடைக்கும். நன்றாக பராமரிக்கப்பட்டால் ஹெக்டேருக்கு 100 டன்கள் வரைகூட கிடைக்கும். பண்ருட்டி தாலுகா விவசாயிகள் 100 டன்கள் வரை பலாப்பழங்களை விளைவிக்கிறார்கள். கோடையில் பலத்த மழை இல்லாமல் இருந்தால், இந்த ஆண்டு பலாப்பழ உற்பத்தி அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்றார் அவர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior