உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 07, 2011

அண்ணாமலைப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக நாகேஸ்வரராவ் தேர்வு

சிதம்பரம்:

            சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக தொலைதூரக்கல்வி இயக்குநர் முனைவர்  எஸ்.பி.நாகேஸ்வரராவ்  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

           பல்கலைக்கழக கல்விக்குழு உறுப்பினர்களால் ஒரு சிண்டிகேட் உறுப்பினர் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்நிலையில் பல்கலைக்கழக செனட் ஹாலில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் கல்விக்குழு உறுப்பினர்கள் (அகடமிக் கவுன்சில்) பங்கேற்று வாக்களித்து தொலைதூரக் கல்வி இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவை தேர்வு செய்தனர்.  

            தேர்வு செய்யப்பட்ட சிண்டிகேட் உறுப்பினர் எஸ்.பி.நாகேஸ்வரராவுக்கு இணை வேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி, துணை வேந்தர் எம்.ராமநாதன், பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, தேர்வு கட்டுப்பாடு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம், இணை வேந்தரின் செயலர் எஸ்.ராஜேந்திரன், மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம், துணை வேந்தரின் செயலர் சி.ராஜசேகர், தனி அலுவலர் எம்.ரவிச்சந்திரன், செனட் உறுப்பினர் தில்லை சீனு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior