உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 07, 2011

கடலூர் மாவட்டத்தில் ஓட்டுச்சாவடி பாதுகாப்பு பணி குலுக்கல் முறையில் போலீஸ் தேர்வு

கடலூர் : 

           ஓட்டுச்சாவடி பாதுகாப்புப் பணிக்கான போலீசார், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

             வரும் 13ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக, கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டசபை தொகுதிகளில், வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதற்கு வசதியாக, 1,071 மையங்களில், 1,995 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தேர்தல் அன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள போலீசார், முதல்முறையாக கம்ப்யூட்டரில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி நடந்தது.

              மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், கூடுதல் கலெக்டர் வீரராகவராவ், தேர்தல் பார்வையாளர்கள் டோக் ரஜுர்கர், ஷாலினி மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. தேர்வு செய்யப்பட்ட போலீசாருக்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior