உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 31, 2011

கடலூரில் அரசு துறை தேர்வு: 817 பேர் பங்கேற்பு

கடலூர் : 

            கடலூரில் கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து நடந்து வரும் அரசு துறை தேர்வுகளின் நேற்று அதிகளவாக 817 பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் உள்ள அரசு துறைகளின் பதவி உயர்வுக்காக துறை சார்ந்த கணக்கு தேர்வு உள்ளிட்ட அனைத்து துறைகள் சம்பந்த பட்ட துறை தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி வருகிறது. 

             கடலூர் மாவட்டத்தில் கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி வாளாகத்தில் துறை தேர்வுகள் கடந்த 24ம் தேதி துவங்கியது. காலை, மாலை இரு வேளைகளும் தேர்வுகள் நடந்து வருகிறது. இத்தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த ஆறு நாட்களாக நடந்து வரும் தேர்வில் நேற்று நடந்த தேர்வில் 1,144 பேர் தேர்வு எழுத அழைப்பு அனுப்பட்டிருந்தது. அதில் 817 பேர் பங்கேற்றனர். பதவி உயர்விற்கான தேர்வு என்பதால் அரசு பணியில் உள்ளவர்கள் ஆர்வத்துடன் தேர்வில் பங்கேற்றனர். 




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior