உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 31, 2011

காட்டுமன்னார்கோவில் அருகே இலவச ஆட்டோ சேவை சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் தொடங்கி வைத்தார்

சிதம்பரம்:

             காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். 

           அதனைத் தொடர்ந்து இலவச ஆட்டோ சேவையையும் தொடங்கி வைத்தார். அவசர காலத்தில் பொதுமக்கள் இந்த ஆட்டோ சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.  இவ்விழாவிற்கு மாவட்டச் செயலாளர் ஏ. அருண்மொழிதேவன் தலைமை வகித்தார். குமராட்சி ஒன்றியச் செயலாளர் கே.ஏ. பாண்டியன் வரவேற்றார். சட்டப்பேரவை உறுப்பினர் நாக. முருகுமாறன், மாவட்ட பேரவைச் செயலாளர் வி.கே. மாரிமுத்து, ஒன்றிய பேரவைச் செயலாளர் ஜெயமணி, காட்டுமன்னார்கோவில் நகர செயலாளர் எம்ஜிஆர்தாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். லால்பேட்டை நகரச் செயலாளர் நஜீர்அகமது நன்றி கூறினார்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior