உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 31, 2011

கடலூர் மாவட்ட எஸ்.பி.யாக பகலவன் பொறுப்பேற்பு

கடலூர் : 

            கடலூர் மாவட்டத்தில் 62வது எஸ்.பி.,யாக பகலவன் நேற்று பொறுப்பேற்றார். 

            தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, போலீஸ் அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டனர். அதில், கடலூர் மாவட்ட எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் சென்னை, புளியந்தோப்பு உதவி ஆணையராக மாற்றப்பட்டார். அவர் நேற்று முன்தினம் மாறுதலாகி சென்றார். அவருக்கு பதிலாக சென்னை பூக்கடை உதவிய ஆணையராக இருந்த பகலவன் கடலூர் மாவட்ட எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். அவர், நேற்று காலை கடலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். 

          அவருக்கு உட்கோட்ட டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கடலூர் மாவட்ட எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுள்ள பகலவன், டி.எஸ்.பி.,யாக இருந்து எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்று திருச்சியில் உதவி ஆணையராகவும், பின்னர் விழுப்புரத்தில் எஸ்.பி.,யாகவும், இறுதியாக சென்னை பூக்கடை உதவி ஆணையராக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior