உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 31, 2011

சிதம்பரம் மணலூரில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய பந்து பூ

சிதம்பரம்:

             ஆண்டுக்கு ஒருமுறை, மே மாதத்தில் மட்டும் பூக்கும் அழகிய பந்து பூ சிதம்பரத்தில் இப்போது பூத்துள்ளது. இதனை அறிந்த இப்பகுதி மக்கள் அந்த அரிய வகை பூவை அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர். சிதம்பரம் மணலூரில் உள்ள நித்யா நர்சரி கார்டனில் இந்த அதிசயப் பூ பூத்துள்ளது. 

இது குறித்து நர்சரி கார்டனின் உரிமையாளர் பாலசுப்பிரமணியன் கூறியது:

             "இந்த பூ லில்லி வகை குடும்பத்தைச் சேர்ந்தது. மலைப்பிரதேசத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இந்த பூ காணப்படும். இந்த பூ பால்பூ என்றும், மே மாதம் பூப்பதால் மே பூ என்றும் அழைக்கப்படுகிறது. கிழங்கு போன்ற இதன் விதையை பூமியிலோ அல்லது பூச்சாடியிலோ விதைத்தால் வருடத்திற்கு ஒருமுறை திடீரென மே மாதத்தில் இலை இல்லாமல் நீண்ட தண்டுபோல் வளர்ந்து பந்து போன்று பூ பூக்கும். இந்த பூ ஒரு மாதம் வரை வாடாமல் இருக்கும். பின்னர் தண்டு மற்றும் பூவும் வாடி செடி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். பின்னர் அடுத்த வருடம் மே மாதம்தான் இந்த பூ பூக்கும்' என்றார் அவர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior