உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 28, 2011

கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வில் என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ரஞ்சிதா முதலிடம்


மாணவி எஸ்.ரஞ்சிதாவை பாராட்டும் பள்ளித் தலைமை ஆசிரியை ஆர்.எஸ்.மணிமொழி. உடன், மாணவியின் பெற்றோர்.
 
நெய்வேலி:

           பத்தாம் வகுப்புத் தேர்வில் நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ்.ரஞ்சிதா 493 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

                 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாயின. இதில் என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ்.ரஞ்சிதா முதலிடம் பிடித்தார். இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆர்.பிரியங்கா 489 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 2-ம் இடத்தையும், எஸ்.ஆனந்தி 486 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 3-ம் இடத்தையும் பிடித்தனர். இப் பள்ளியில் இந்த ஆண்டு 97 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியின் தேர்ச்சி விழுக்காட்டுக் காரணமான பள்ளித் தலைமை ஆசிரியை ஆர்.எஸ்.மணிமொழி, ஆசிரியர்களை என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர்.அன்சாரி மற்றும் இயக்குநர்கள் பாராட்டினர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior