உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 28, 2011

சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி.பிரியதர்ஷினி மாவட்ட அளவில் 2-ம் இடம்

சிதம்பரம்:

            சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற கிராமப்புற மாணவி ஜி.பிரியதர்ஷினி, 487 மதிப்பெண்கள் பெற்று 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடத்தையும், நகர அளவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

              சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த ஜீவானந்தம்-இந்திராணி தம்பதியின் மகளான பிரியதர்ஷினி, கணிதத்தில் 100, தமிழில் 95, ஆங்கிலத்தில் 96, அறிவியலில் 99, சமூக அறிவியலில் 97-ம் பெற்றுள்ளார்.மாணவி பிரியதர்ஷினியை பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் ஏ.சம்பந்தம், தலைமை ஆசிரியர் ராஜன் ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

மாணவி பிரியதர்ஷினி பேசுகையில் 

           இரவு, பகல் பாராமல் படித்து வந்தேன். தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஊக்கமளித்ததால் அதிக மதிப்பெண் பெற்றேன். எதிர்காலத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்து நல்ல பொறியாளராக திகழவேண்டும் என்பது எனது ஆசை என மாணவி பிரியதர்ஷினி தெரிவித்தார்.


 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior