உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 25, 2009

விதிமீறல் :​ 18 பள்ளி வாக​னங்​கள் சிக்​கின

கட ​லூர்,​ நவ.24: ​ ​ ​

கட​லூ​ரில் செவ்​வாய்க்கி​ழமை 2 மணி நேரம் அரசு அலு​வ​லர்​கள் மேற்​கொண்ட ஆய்​வில் வீதி​மீ​றல்​கள் காணப்​பட்ட 18 பள்ளி வாக​னங்​கள் சிக்​கின. அவற்​றுக்கு அப​ரா​தம் விதிக்​கப்​ப​டும் என்று அலு​வ​லர்​கள் தெரி​வித்​த​னர்.​ கட​லூர் அருகே திங்​கள்​கி​ழமை பள்ளி வேன் விபத்​தில் சிக்​கி​ய​தில் எல்.கே.ஜி. மாண​வர் ஒரு​வர் இறந்​தார். 47 மாணவ மாண​வி​யர் காயம் அடைந்​த​னர். இந்த வேனை போக்​கு​வ​ரத்து அலு​வ​லர்​கள் ஆய்வு செய்​த​தில்,​ 16 பேர் மட்​டும் பய​ணிக்க அனு​மதி உள்​ளது என்​றும் குழந்​தை​க​ளாக இருப்​ப​தால் 32 பேரை அனு​ம​திக்​க​லாம்,​ ஆனால் 48 பேர் பய​ணம் செய்​துள்​ள​னர். பளு தாங்​கா​ம​லேயே இந்த விபத்து ஏற்​பட்​டுள்​ளது ​ ​ என்று தெரி​ய​வந்​துள்​ளது. எனவே அனைத்​துப் பள்ளி,​ கல்​லூரி வாக​னங்​க​ளை​யும் ஆய்வு செய்​யு​மாறு மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் உத்​த​ர​விட்​டார். ​​

அதன்​படி கட​லூர் வட்​டா​ட​சி​யர் தட்​சி​ணா​மூர்த்தி,​ வட்​டா​ரப் போக்​கு​வ​ரத்து அலு​வ​லர் ஜெயக்​கு​மார்,​ போக்​கு​வ​ரத்து போலீஸ் ஆய்​வா​ளர் ராம​தாஸ் உள்​ளிட்ட அலு​வ​லர்​கள் இந்த ஆய்வை மேற்​கொண்​ட​னர். கட​லூர் டவுன்​ஹால் எதி​ரில் காலை 8 மணி முதல் 10 மணி வரை இந்த ஆய்வு மேற்​கொள்​ளப் பட்​டது. இதில் பள்ளி வாக​னங்​க​ளுக்​கான விதி​மு​றை​களை மீறிய 18 வாக​னங்​கள் சிக்​கின.​ அனைத்து வாக​னங்​க​ளி​லும் முதல் உத​விப்​பெட்டி இல்லை. 57 பேர் அம​ரும் வசதி கொண்ட பஸ்​ஸில் 100-க்கும் மேற்​பட்ட மாண​வர்​கள் ஏற்​றப்​பட்டு இருந்​த​னர்,​சில பஸ்​க​ளில் இரு​வர் அம​ரும் இருக்​கை​யில் 5 மாண​வர்​கள் பய​ணித்​த​னர். விதி​க​ளுக்கு மாறாக காற்று ஒலிப்​பான்​கள் பொருத்​தப்​பட்டு இருந்​தன.​ பிடி​பட்ட வாக​னங்​க​ளுக்கு நோட்​டீஸ் வழங்​கப்​பட்டு இருக்​கி​றது. விதி​மீ​றல்​க​ளுக்கு ஏற்ப பின்​னர் அப​ரா​தம் விதிக்​கப்​ப​டும் என்று அலு​வ​லர்​கள் தெரி​வித்​த​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior