உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 25, 2009

படகு கவிழ்ந்து மீனவர் சாவு

கடலூர், நவ.24:

கடலூர் அருகே செவ்வாய்க்கிழமை படகு கவிழ்ந்து மீனவர் நாகமுத்து (48) இறந்தார். தாழங்குடாவைச் சேர்ந்த நாகமுத்து சக மீனவர்கள் மணி, மகேந்திரன், லட்சுமணன், கோபால்சாமி ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு கடலில் மீன்பிடிக்கச் சென்றார். மீன் பிடித்துவிóட்டு கரை திரும்புகையில் அலைகளில் சிக்கினர். படகு கவிழ்ந்ததில் நாகமுத்து வலையில் சிக்கிக் கொண்டார். வெளியே வரமுடியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்தார். உடன் இருந்தவர்கள் அவரது உடலை கரைக்குக் கொண்டு வந்தனர். ரெட்டிச்சாவடி போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior