உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 25, 2009

கூடுதலாக 5 உண்டியல்கள்

சிதம்பரம், நவ.24:

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேலும் 5 உண்டியல்கள் இந்து அறநிலையத் துறையினரால் வருகிற 27-ம் தேதி வைக்கப்பட்ட உள்ளது.

நடராஜர் கோயிலை உயர்நீதிமன்ற ஆணைப்படி இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்திய பின்னர் முதன் முதலாக பிப்ரவரி 5-ம் தேதி சித்சபை எதிரே உண்டியல் வைக்கப்பட்டது. அதன்பின்னர் ஜூலை.9-ம் தேதி ஆதிமூநலநாதர் சன்னதி, சிவகாமி அம்மன் சன்னதி, கொடிமரம் ஆகிய இடங்களில் மேலும் 3 உண்டியல்கள் வைக்கப்பட்டன. இதுவரை 10 மாதங்களில் 4 முறை உண்டியல்கள் எண்ணப்பட்டதில் ரூ.8,51,996 கிடைத்துள்ளது. இந் நிலையில் நடராஜர் கோயிலில் மேலும் பல்வேறு இடங்களில் 5 உண்டியல்கள் வருகிற 27-ம் தேதி வைக்கப்பட்டவுள்ளது என அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.வரும் 26-ல் பிரசாதக்கடை ஏலம் 3-ம் பிரகாரத்தில் கிழக்கு நுழைவுவாயில் மற்றும் மேற்கு நுழைவு வாயில் அருகே பிரசாதக் கடைகள், கிழக்கு நுழைவு வாயில் அருகில் தேங்காய் -பழக்கடை, மேற்கு நுழைவு வாயில் அருகே தேங்காய்-பழக்கடை ஆகியவற்றை 1-12-2009 முதல் 30-6-2010 வரை நடத்துவதற்கான ஏலம் வரும் 26-ம் தேதி காலை 12 மணிக்கு ஆலயத்தில் உள்ள செயல் அலுவலர் அலுவலகத்தில் இணை ஆணையர் ந.திருமகள் முன்னிலையில் நடைபெறுகிறது. கடந்த மாதம் ஏலம் விடப்பட்ட போது ஏலத் தொகை கூடுதலாக இருந்ததால் யாரும் ஏலம் கேட்காததால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது 2 வது முறையாக ஏலம் விடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் க.சிவக்குமார் செய்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior