உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 25, 2009

நில அளவை முகாம் இன்று தொடக்கம்

பண்ருட்டி, நவ.24:

பண்ருட்டி குறு வட்டத்தில் நவம்பர் 24-ம் தேதி தொடங்கி டிசம்பர் 21-ம் தேதி வரை நில அளவை முகாம் நடைபெறுகிறது. பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவை பிரிவில் பட்டா மாறுதல், புல எல்லை அளந்தல் போன்ற இனங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை விரைந்து தீர்வு செய்ய வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், பண்ருட்டி குறு வட்டத்தை சேர்ந்த மருங்கூரில் நவம்பர் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையிலும், காடாம்புலியூரில் டிசம்பர் 1 முதல் 7-ம் தேதி வரையிலும், பண்ருட்டி.யில் 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையிலும், நெல்லிக்குப்பத்தில் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையிலும் தலா ஒரு வாரம் நில அளவை அலுவலர்கள் முகாமிட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விசாரணை செய்ய உள்ளனர். எனவே மேற்கண்ட குறுவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நில அளவை முகாமை பயன்படுத்திக் கொள்ளும்படி அறிவுருத்தப்படுகிறார்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior