உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 15, 2009

நெல்லிக்குப்பத்தில் 1000 க்​கும் மேற்​பட்​டோர் ஆர்ப்​பாட்​டம்

கடலூர்,​​ டிச.​ 14:​ 
 
                நெல்​லிக்​குப்​பத்​தில் நீக்​கப்​பட்ட பஸ் நிறுத்​தத்தை மீண்​டும் அனு​ம​திக்​கக் கோரி,​​ திங்​கள்​கி​ழமை ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்​டோர் ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர்.​ எங்கே அதி​க​மான மக்​கள் கூடி​நின்று கை காட்​டு​கி​றார்​களோ அவ்​வி​டங்​கள் எல்​லாம் பஸ் டிரை​வர்​க​ளுக்கு பஸ் நிறுத்​தங்​கள்​தான்.​   
 
                         100-க்கும் மேற்​பட்ட பய​ணி​கள் நின்று கைகாட்​டி​னா​லும் பஸ்​கள் நிற்​கா​மல் செல்​லும் நிலையை செயற்​கை​யாக உரு​வாக்கி இருக்​கி​றது நெல்​லிக்​குப்​பம் காவல்​துறை.​ பஸ் நிறுத்​த​மும் இங்கு அர​சி​யல் ஆக்​கப்​பட்டு விட்​டதோ என்று ஐயத்தை உரு​வாக்கி உள்​ள​னர்.​ ​30 ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்ட மக்​கள் வசிக்​கும் பகு​தி​யில்,​​ 60 ஆண்​டு​க​ளுக்கு மேல் இருந்து வந்த பஸ் நிறுத்​தத்தை திடீ​ரென அகற்​றி​விட்​ட​தால் மக்​கள் பெரி​தும் பாதிக்​கப்​பட்டு உள்​ள​னர்.​ ​பஸ் நிறுத்​தத்தை அகற்​றி​னால்​தான் பஸ் நிலை​யத்​துக்​குள் பய​ணி​கள் கூட்​டம் வரும் என்ற நோக்​கத்​தில் இந்த ஏற்​பாட்டை காவல்​துறை மேற்​கொண்டு இருப்​ப​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​      
 
                 வழக்​க​மான முறை​யில் பஸ் நிறுத்​தம் வேண்​டும் என்று கோரி நெல்​லிக்​குப்​பம் நகர மக்​கள் கடந்த 2 மாதங்​க​ளா​கப் பல்​வேறு போராட்​டங்​களை ​ ​ நடத்​தி​விட்​ட​னர்.​ ஆனால் அரசு செவி​சாய்க்​க​வில்லை.​ ​ எ​னவே தமிழ்​நாடு முஸ்​லிம் முன்​னேற்​றக் கழ​கம் சார்​பில் திங்​கள்​கி​ழமை சாலை​ம​றி​யல் போராட்​டம் அறி​விக்​கப்​பட்டு இருந்​தது.​   இந்த போராட்​டத்​தில் த.மு.மு.க.வினர் மட்​டு​மன்றி பொது​மக்​க​ளும் ஏரா​ள​மா​கக் கலந்து கொண்​ட​னர் ஊர்​வ​ல​மாக வந்த அவர்​களை போலீ​ஸôர் தடுத்து நிறுத்​தி​னர்.​     எனி​னும் தங்​கள் அனை​வ​ரை​யும் கைது செய்​யு​மாறு அவர்​கள் கோஷ​மிட்டு ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.​÷அஞ் ​சல் நிலைய பஸ் நிறுத்​தம் அருகே நிறுத்​தப்​பட்ட அவர்​க​ளி​டம்,​​ நெல்​லிக்​குப்​பம் எம்.எல்.ஏ.​ சபா.ராஜேந்​தி​ரன்,​​ நக​ராட்​சித் தலை​வர் கெய்க்​வாட் பாபு,​​ வட்​டாட்​சி​யர் பாபு மற்​றும் போலீ​ஸôர் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னர்.​    செவ்​வாய்க்​கி​ழமை காலை 7 மணி முதல் அஞ்​சல் நிலைய பஸ் நிறுத்​தம் அனு​ம​திக்​கப்​ப​டும் என்று உறுதி அளித்​த​தைத் தொடர்ந்து போராட்​டம் முடி​வுக்கு வந்​தது.​ உறுதி அளித்​த​படி பஸ் நிறுத்​தம் அனு​ம​திக்​கப்​ப​டா​விட்​டால் மீண்​டும் 16-ம் தேதி முதல் போராட்​டத்​தைத் தொடங்​கு​வோம் என்று அறி​வித்து உள்​ள​னர்.​ ​போராட்​டத்​துக்கு த.மு.மு.க.​ மாநில துணைச் செய​லா​ளர் எஸ்.எம்.ஜின்னா தலைமை வகித்​தார்.​ மாவட்​டச் செய​லா​ளர் எம்.ஷேக் தாவுத் முன்​னிலை வகித்​தார்.​ மாவட்​டப் பொரு​ளா​ளர் அமீர்​பாஷா,​​ நக​ரத் தலை​வர் அப்​துல்​ர​கீம்,​​ துணைத் தலை​வர் அப்​துல் ரகு​மான்,​​ போராட்​டக்​குழு தலை​வர் சர்​பு​தீன் உள்​ளிட்ட பலர் கலந்​து​கொண்​ட​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior