உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 15, 2009

பாரதியார் பிறந்தநாள்

கடலூர்:

                                  கடலூரில் பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கடலூர் திருப்பாதிரி புலியூர் பாடலேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் முத்துராமன் தலைமை தாங்கினார். தமிழாசிரியை புவனேஸ்வரி வரவேற்றார். ஓய்வு பெற்ற கல்வித்துறை கண்காணிப்பாளர் ராஜா முன்னிலை வகித்தார். பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கடல் நாகராசன் பரிசு வழங்கினார்.

                        மற்றொரு விழா; திருவள்ளுவர் பயிற்சி பள்ளி யில் நடந்த விழாவிற்கு பயிற்சி பள்ளி நிறுவனர் ஸ்ரீநிவா சன் தலைமை தாங்கினார். ஆசிரியர் சுபாஷ் முன் னிலை வகித் தார். ஆசி ரியை கயல்விழி வரவேற் றார். சிறப்பு விருந்தினராக ஐந்தாம் உலக தமிழ்சங்க நிறுவனர் முத்துகுமரன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். பரங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசராகவன் பாரதியும்& தமிழ்சங்கமும் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். ஆசிரியை கார்த்திகா நன்றி கூறினார்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior