உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 15, 2009

26 ஆயிரம் ஊன​முற்​றோருக்கு அடை​யாள அட்டை

கடலூர்,​​ டிச.​ 14:​ 
 
             கட​லூர் மாவட்​டத்​தில் ஊன​முற்​றோர் 26 ஆயி​ரம் பேருக்கு அடை​யாள அட்டை வழங்​கப்​பட்டு இருப்​ப​தாக மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் திங்​கள்​கி​ழமை தெரி​வித்​தார்.​ ​
 
              க​ட​லூர் ஒய​ஸிஸ் ஊன​முற்​றோர் பள்ளி வளா​கத்​தில் சர்​வ​தேச ஊன​முற்​றோர் விளை​யாட்​டுப் போட்​டி​க​ளைத் தொடங்கி வைத்து ஆட்​சி​யர் பேசி​யது:​ க ​ட​லூர் மாவட்​டத்​தில் ஊன​முற்​றோ​ருக்​காக இரு அர​சுப் பள்​ளி​கள் உள்​பட 15 பள்​ளி​கள் இயங்கி வரு​கின்​றன.​ இவற்​றில் 850 குழந்​தை​கள் படிக்​கி​றார்​கள்.​ இவர்​க​ளுக்கு ஆண்டு உத​வித்​தொகை 1 முதல் 5 வகுப்பு வரை ரூ.500,​ 6 முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.1500,​ 9 முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.2 ஆயி​ரம் வழங்​கப்​ப​டு​கி​றது.​ ஆ​தி​தி​ரா​வி​டர் சமூ​கத்​தில்​தான் ஊன​முற்​றோர் எண்​ணிக்கை அதி​க​மாக உள்​ளது.​ மாநி​லத்​தி​லேயே ஊன​முற்​றோர் எண்​ணிக்​கை​யில் கட​லூர் மாவட்​டம் 5-வது இடத்​தில் உள்​ளது.    ​ 
 
                கட​லூர் மாவட்​டத்​தில் 26 ஆயி​ரம் பேருக்கு ஊன​முற்​றோர் அடை​யாள அட்​டை​கள் வழங்​கப்​பட்டு உள்​ளன.​ ஊன​முற்​றோர் 2,847 பேருக்கு மத்​திய அரசு உத​வித் தொகை ரூ.400-ம்,​​ மாவட்ட ஊன​முற்​றோர் மறு​வாழ்​வுத் துறை மூல​மாக 1400 பேருக்கு ரூ.500-ம் வழங்​கப்​ப​டு​கி​றது என​றார் ஆட்​சி​யர்.​ ​மா​வட்ட மறு​வாழ்வு அலு​வ​லர் சீனி​வா​சன் வர​வேற்​றார்.​ மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.நட​ரா​ஜன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior