உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 15, 2009

பஸ் படிக்​கட்டு உடைந்து 5 பேர் காயம்

விருத்தா​ச​லம்,​​ டிச.​ 14:​ 

                  விருத்​தா​ச​லம் அருகே சாலை​யில் வந்​து​கொண்​டி​ருந்த அரசு பஸ்​ஸில் திடீ​ரென படிக்​கட்டு உடைந்து விழுந்​தது.​ இதில் பலத்த காய​ம​டைந்த 5 பேர் அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்​ட​னர்.​ இதைக் கண்​டித்​தும்,​​ சாலையை சீர​மைக்​கக் கோரி​யும் அப் பகுதி மக்​கள் திடீர் சாலை மறிய​லில் ஈடு​பட்​ட​னர்.​ பண் ​ருட்​டியி​லி​ருந்து திங்​கள்​கி​ழமை காலை புறப்​பட்ட அரசு பஸ் காட்​டுக்​கூ​ட​லூர் வழி​யாக விருத்​தா​ச​லத்​துக்கு வந்து கொண்​டி​ருந்​தது.​ காலை 9 மணி​ய​ள​வில் சின்​னக்​கண்​டி​யங்​குப்​பம் கிரா​மத்​தில் பய​ணி​களை ஏற்​றிக்​கொண்டு புறப்​பட்டு சென்று கொண்​டி​ருந்த போது பஸ்​ஸின் பின்​பக்க படிக்​கட்டு திடீ​ரென உடைந்து விழுந்​தது.​

                      இச் சம்​ப​வத்​தில் அந்த பஸ்​ஸில் பய​ணித்த அதே கிரா​மத்​தைச் சேர்ந்த சுகந்தி ​(17),​ சீத்தா ​(20),கோட்​டேரி கிரா​மத்​தைச் சேர்ந்த வெங்​க​டா​லம் ​(60),​ ஐயப்​பன் ​(32),​ சிங்​கா​ர​வேல் ​(65) ஆகி​யோர் பலத்த காய​ம​டைந்​த​னர்.​ இதை​ய​டுத்து,​​ அவர்​கள் அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்​ட​னர்.​ அ​ரசு பஸ்​ஸின் அவ​லத்​தைக் கண்​டித்​தும்,​​ சாலையை செப்​ப​னிட வலி​யு​றுத்​தி​யும் அப் பகுதி மக்​கள் திடீ​ரென சாலை மறி​யல் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.​ இத​னால்,​​ காட்​டுக்​கூ​ட​லூர் சாலை​யில் 2 மணி நேரம் போக்​கு​வ​ரத்து பாதிக்​கப்​பட்​டது.​ த​க​வ​ ல​றிந்த வட்​டாட்​சி​யர் பூபதி,​​ காவல் நிலைய உதவி ஆய்​வா​ளர்​கள் மாரி​யப்​பன்,​​ உஸ்​மான் ஆகி​யோர் அங்கு விரைந்து சென்று மறிய​லில் ஈடு​பட்​ட​வர்​க​ளு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னர்.​ அப் பகு​தி​யில் கூடு​தல் பஸ்​களை இயக்க வேண்​டும்;​ குண்​டும்,​​ குழி​யு​மான சாலை​களை ​ சீர​மைக்க வேண்​டும் என பொது​மக்​கள் விடுத்த கோரிக்​கை​கள் குறித்து நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என வட்​டாட்​சி​யர் உறு​தி​ய​ளித்​தார்.​ இ​தைத் தொடர்ந்து,​​ போராட்​டத்தை கைவிட்ட பொது​மக்​கள் அங்​கி​ருந்து கலைந்து சென்​ற​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior