உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 15, 2009

அலட்​சி​யம் காட்​டும் நெடுஞ்​சா​லைத்​ துறை


நெய்வேலி, ​​ டிச.​ 14:​ 
 
                விக்​கி​ர​வாண்டி-​கும்​ப​கோ​ணம் தேசிய நெடுஞ்​சா​லை​யில் வாகன விபத்​துக்​க​ளால் உயி​ரி​ழப்பு மற்​றும் கை,​​ கால் இழப்பு தொடர் கதை​யாகி உள்​ளது.​ சாலை​யை​யும்,​​ பாலங்​க​ளை​யும் சீர​மைக்க வேண்​டிய நெடுஞ்​சா​லைத் துறை​யி​னர் விபத்து தடுப்பு நட​வ​டிக்​கை​களை இது​வரை மேற்​கொண்​ட​தா​கத் தெரி​ய​வில்லை.​ இந்த நெடுஞ்​சா​லைத் துறை​யின் போக்​கைக் கண்​டித்து பண்​ருட்டி எம்​எல்ஏ தலை​மை​யில் இம்​மா​தம் 26-ம் தேதி வட​லூ​ரில்  மறி​யல் போராட்​ட​மும் நடை​பெ​ற​வுள்​ளது.​ விக்​ கி​ர​வாண்டி-​தஞ்சை சாலை தேசிய நெடுஞ்​சா​லை​யாக மாற்​றப்​பட்டு 3 ஆண்​டுக்கு மேலா​கி​றது.​ 167 கி.மீ.​ உள்ள இச் சாலை​யில் 156 சிறிய பாலங்​க​ளும்,​​ 60-க்கும் மேற்​பட்ட பெரிய பாலங்​க​ளும்,​​ 2 தரைப் பாலங்​க​ளும் உள்​ளன.​ இச்​சா​லை​யில் கன​ரக வாக​னப் போக்​கு​வ​ரத்து தற்​போது அதி​க​ரித்​த​வண்​ணம் உள்​ளது.​ மிக​வும் குறு​க​லான இச்​சா​லை​யில் வாகன விபத்​தும் தொடர்ந்​த​வண்​ணம் உள்​ளது.​ மேலும் சில நேரங்​க​ளில் வாக​னங்​கள் ஒன்றை ஒன்று முந்த முயற்​சிக்​கும் போது சாலை​யோ​ரத்​தில் உள்ள கால்​வா​யில் கவி​ழும் நிகழ்​வு​க​ளும் அரங்​கே​றி​ வ​ரு​கி​றது.​ இச்​சா​லை​யில் வட​லூர் அருகே கண்​ணுத்​தோப்பு கிரா​மத்​தில் உள்ள மிகக்​கு​று​க​லான பாலத்​தில் மாதத்​துக்கு ஒரு விபத்து வீதம் நடை​பெற்​றுக் கொண்​டு​தான் இருக்​கின்​றன.​ ஒவ்​வொரு விபத்​தின் போது பாலத்​தின் பக்​க​வாட்​டுச் சுவர் இடிந்து விழு​வ​தும்,​​ பின்​னர் அவை சம்​பி​ர​தா​யத்​துக்கு கட்​டப்​ப​டு​வ​தும் தொடர்​க​தை​யாகி வரு​கி​றது.​ பா​லத்​தில் ஏன் அடிக்​கடி விபத்து ஏற்​ப​டு​கி​றது,​​ அவற்றை தடுக்க என்​ன​வழி என்​பது குறித்து இது​வரை நெடுஞ்​சா​லைத் துறை ஆய்வு நடத்​தி​யதா என்​பது கேள்​விக்​கு​றியே.​ குறைந்​த​பட்​சம் பாலத்​தின் நிலை குறித்​தும்,​​ பாலத்​தில் தடுப்​புச் சுவர் இல்லை என்​பதை சுட்​டிக்​காட்ட கூடிய விளம்​ப​ரத் தட்​டி​கூட வைக்​கப்​ப​டா​த​தும் பெரிய குறை​யா​கவே காணப்​ப​டு​கி​றது.​ இந்​நி ​லை​யி ல் சனிக்​கி​ழமை இரவு இரும்​புக் குழாய்​களை ஏற்​றி​வந்த லாரி ஒன்று சாலை​யின் விளிம்பு தெரி​யா​மல் தலைக்​குப்​புற கவிழ்ந்​த​தில் லாரி உருக்​கு​லைந்​துள்​ளது.​ மேலும் லாரி​யின் டிரை​வ​ருக்கு தலை​யில் பலத்​தக் காய​மும்,​​ கிளீ​ன​ருக்கு இடுப்பு எலும்பு முறி​வும் ஏற்​பட்​டுள்​ளது.​ இந்​நி​லை​யில் இச்​சா​லை​யில் உள்ள பாலங்​களை உட​ன​டி​யாக சீர​மைக்​கக் கோரி பண்​ருட்டி எம்​எல்ஏ வேல்​மு​ரு​கன் தலை​மை​யில் வட​லூர் நான்​கு​முனை சந்​திப்​பில் சாலை​ம​றி​யல் போராட்​டம் நடத்​தப்​போ​வ​தாக அறி​வித்​துள்​ள​னர்.​ சா​லை​யில் மேற்​கொள்​ளப்​ப​ட​வுள்ள பணி​கள் குறித்து தேசிய நெடுஞ்​சா​லைத்​துறை கூடு​தல் பொறி​யா​ளர் அதி​பதி கூறி​யது:​ இச்​சா​லை​யில் மேற்​கொள்​ளப்​ப​ட​வுள்ள பணி​கள் தொடர்​பாக மதிப்​பீடு செய்​யும் பணி நடை​பெ​று​கி​றது.​ மார்ச் மாதத்​தில் மதிப்​பீட்டு அறிக்கை கிடைத்​த​வு​டன் ஜூன் மாதத்​தில் பணி​கள் தொடங்​கி​வி​டும் என்​றார் அதி​பதி.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior