உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 03, 2009

கிடங்​கில் தீ ரூ.20 லட்​சம் வேப்​பம் பிண்​ணாக்கு எரிந்து சேதம்

ட​லூர்,​ ​ டிச. 2:​ 

            கட​லூ​ரில் சேமிப்​புக் கிடங்​கில்,​ புதன்​கி​ழமை ஏற்​பட்ட தீ விபத்​தில் ரூ.20 லட்​சம் மதிப்​புள்ள வேப்​பம் பிண்​ணாக்கு எரிந்து  அடைந்​தது. இ.ஐ.டி. பாரி நிறு​வ​னத்​துக்​குச் சொந்​த​மான சேமிப்​புக் கிடங்கு கட​லூர் முது​ந​கர் கிளைவ் தெரு​வில் உள்​ளது.   வேப்​பங் கொட்​டை​யில் இருந்து பூச்​சிக் கொல்லி மருந்​துக்​கான எண்​ணையை பிரித்து எடுத்​து​விட்டு பிண்​ணாக்கு,​ இந்த சேமிப்​புக் கிடங்​கில் வைக்​கப்​பட்டு இருந்​தது. இது உரம் தயா​ரிக்க பயன்​ப​டுத்​தக் கூடி​ய​தா​கும். ​ இந்த சேமிப்​புக் கிடங்​கில் புதன்​கி​ழமை திடீ​ரென தீ விபத்து ஏற்​பட்​டது. இதில் அஸ்​பெஸ்​டாஸ் கூரை​கள் வெடித்​துச் சித​றின.   அக்​கம் பக்​கத்​தில் உள்​ள​வர்​கள் பார்த்து தீய​ணைப்பு நிலை​யத்​துக்​குத் தக​வல் தெரி​வித்​த​னர். 

                  கட​லூர் நிலைய தீய​ணைப்பு அலு​வ​லர் வெங்​க​டே​சன் தலை​மை​யில் தீய​ணைப்​புப் படை​யி​னர் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரம் போராடி,​ தீயை அணைத்​த​னர். ​ சே​மிப்​புக் கிடங்​கில் தலா ரூ.1,000 மதிப்​புள்ள 2 ஆயி​ரம் மூட்டை வேப்​பம் பிண்​ணாக்கு அடுக்கி வைக்​கப்​பட்டு இருந்​தது.   அவற்​றில் பெரும் பகுதி எரிந்து சேதம் அடைந்து விட்​ட​தாக சேமிப்​புக் கிடங்கு நிர்​வாகி ஒரு​வர் தெரி​வித்​தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior