உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 03, 2009

காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாகனம் இல்லாமல் பணிகள் பாதிப்பு

   டிச 02 , காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் தாசில்தாருக்கு வாகனம் இல்லாததால் பணிகள் பாதிப்படைந்துள்ளது.


காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நீண்ட நாள் இருந்த வாகனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பழுதாகி நின்றது. இதனால் அந்த வாகனம் பயன்இல்லை என முடிவு செய்து அங்கேயே நிறுத்தப்பட்டது. இதனால் வட்டாட்சியர் பல்வேறு கிராமங்களுக்கு சென்று அரசு திட்டங்களை நடை முறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. சமூக நல பாதுகாப்பு வட்டாட்சியருக்கு வழங்கப்பட்ட வாகனத்தை வட்டாட்சியர் பயன்படுத்தி வருகிறார். இதனால் வட்டாட்சியரின் வாகன டிரைவர் பணியின்றி இருந்து வருகிறார். சமூக நலப்பிரிவின் பணிகள் பெரிதும் பாதிப்படைகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட புதிய வாகனத்தை வழங்க வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior