உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 03, 2009

கட​லூர் மீன​வர்​கள் மீது நடுக்​கட​லில் தாக்​கு​தல்

கட​லூர்,​ ​ டிச. 2:​ 

                            நடுக்​கட​லில் கட​லூர் மீன​வர்​கள் மீது மீண்​டும் தாக்​கு​தல் நடத்​தப்​பட்​டுள்​ளது. க ​ட​லூரை அடுத்த தாழங்​குடா மீன​வர்​கள் கடந்த நவம்​பர் 24-ம் தேதி கட​லில் மீன்​பி​டிக்​கச் சென்​ற​போது,​ இந்​தி​யக் கடற்​படை.யினர் வழி​ம​றித்து அடை​யாள அட்டை இருக்​கி​றதா பட​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு உள்​ள​னவா என்று கேட்​டும்,​ 12 மைல் தூரத்​துக்கு மேல் ஏன் வந்​தீர்​கள் என்​றும் கேட்டு மிரட்​டி​னர். 50க்கும் மேற்​பட்ட மீன​வர்​க​ளைத் தடி​யால் தாக்​கி​னர். ​இ​து​கு​றித்து மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் அனைத்து மீன​வர் அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​க​ளை​யும் அழைத்​துப் பேசி​னார். இக்​கூட்​டத்​தில் இந்​தி​யக் கடற்​ப​டைப் பிர​தி​நி​தி​கள் யாரும் பங்​கேற்​க​வில்லை.

எனி​னும் நடந்த தாக்​கு​த​லுக்கு கடற்​படை அதி​கா​ரி​கள் வருத்​தம் தெரி​வித்​த​தா​க​வும்,​ இனி இத்​த​கைய சம்​ப​வம் நிக​ழாது என்று கடற்​படை அதி​கா​ரி​கள் உறுதி அளித்து இருப்​ப​தா​க​வும் ஆட்​சி​யர் தெரி​வித்​தார். ​தா​ழங்​குடா மீன​வர் கிரா​மத்​தில் கடற்​படை அதி​கா​ரி​கள் செவ்​வாய்க்​கி​ழமை முகா​மிட்டு,​ கட​லுக்கு மீன்​பி​டிக்​கச் செல்​லும் மீன​வர்​கள் எவ்​வாறு நடந்து கொள்ள வேண்​டும் என்று விழிப்​பு​ணர்வு முகாம் நடத்​தி​னர். மீன​வர் அடை​யாள அட்டை இல்​லா​விட்​டா​லும் ரேஷன் அட்டை,​ வாக்​கா​ளர் அடை​யாள அட்டை இருந்​தால் அவற்றை எடுத்​துச் செல்​ல​லாம் என்​றும் மாவட்ட ஆட்​சி​யர் அறி​வு​றுத்தி இருந்​தார். ​

இந்த நிலை​யில் புதன்​கி​ழமை கட​லூரை அடுத்த சொத்​திக் குப்​பம் கிரா​மத்​தைச் சேர்ந்த மீன​வர்​கள் 10 பேர் 3 பட​கு​க​ளில் மீன் பிடிக்​கச் சென்று இருந்​த​னர். ​அ​வர்​களை இந்​தி​யக் கடற்​ப​டை​யி​னர் வழி​ம​றித்​துத் தாக்கி உள்​ள​தாக தெரி​ய​வந்​துள்​ளது. ஒரு பட​கில் இருந்த மீன​வர்​கள் ஞான​வேல்,​ குண​பா​லன் ஆகி​யோர் தடி​யால் தாக்​கப்​பட்​ட​னர்.

இ​து​கு​றித்து தமிழ்​நாடு மீன​வர் பேரவை கட​லூர் மாவட்​டத் தலை​வர் சுப்​பு​ரா​யன் கூறு​கை​யில்,​ சொத்​திக் குப்​பம் மீன​வர்​கள் மாவட்ட ஆட்​சி​ய​ரின் அறி​வு​ரை​யின் பேரில் ரேஷன் அட்டை மற்​றும் வாக்​கா​ளர் அடை​யாள அட்​டை​களை எடுத்​துச் சென்று உள்​ள​னர். அவை​கள் எதை​யும் பார்க்​கா​மல் இந்​தி​யக் கடற்​ப​டை​யி​னர் மீன​வர்​க​ளைத் தாக்கி உள்​ள​னர். இது மிக​வும் கண்​டிக்​கத் தக்​கது என்​றார்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior