உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 03, 2009

கட​லூர் பாதா​ள சாக்​க​டைத் திட்​டத்​துக்கு மேலும் ரூ.26 கோடி

​ கட​லூர்,​ டிச. 2:​ 


கட​லூர் நகர பாதா​ள சாக்​க​டைத் திட்​டத்​துக்கு மேலும் ரூ.26 கோடி வழங்​கும் வகை​யில் திருத்​திய மதிப்​பீட்​டுக்கு கட​லூர் நக​ராட்சி புதன்​கி​ழமை ஒப்​பு​தல் அளித்​தது. இதற்கு சில உறுப்​பி​னர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​த​னர். ​÷க​ட​லூர் பாதா​ள  சாக்​க​டைத் திட்​டம் ரூ.40.40 கோடி மதிப்​பீட்​டில் தயா​ரிக்​கப்​பட்டு நிறை​வேற்​றப்​பட்டு வரு​கி​றது. 18 மாதங்​க​ளில் முடிக்​கப்​ப​டும் என்று அறி​விக்​கப்​பட்ட இத்​திட்​டம்,​ 3 ஆண்​டு​கள் ஆகி​யும் முடிக்​கப்​ப​ட​வில்லை. 60 சதம் பணி​கள் முடிந்து விட்​ட​தாக குடி​நீர் வடி​கால் வாரி​யம் அறி​வித்து உள்​ளது.   ஆனால்,​ 50 சதம் பணி​கள் கூட முடி​வ​டை​ய​வில்லை என்று பொது​மக்​கள் புகார் தெரி​விக்​கின்​ற​னர். அனைத்​துக்​கும் மேலாக பாதா​ள சாக்​க​டைத் திட்​டத்​துக்கு சாலை​க​ளில் தோண்​டப்​பட்ட குழி​கள்,​ பள்​ளங்​கள் முறை​யாக மூடப்​ப​டா​த​தா​லும் சாலை​கள் போடப்​ப​டா​த​தா​லும் பொது​மக்​கள் பெரி​தும் பாதிக்​கப்​பட்டு உள்​ள​னர். பாதா​ளச் சாக்​கடை திட்​டம் மீதே மக்​க​ளுக்கு பெரி​தும் வெறுப்பு நிலவி வரு​கி​றது. ​÷இந்த நிலை​யில் அத் திட்​டத்​துக்​கான மதிப்​பீட்டை ரூ.66.03 கோடி​யாக உயர்த்தி அதா​வது மேலும் ரூ.25.63 கோடி ஒதுக்க அரசு முடிவு செய்து உள்​ளது.   இந்த முடி​வுக்கு கட​லூர் நக​ராட்சி புதன்​கி​ழமை ஒப்​பு​தல் அளித்​தது. திருத்​திய மதிப்​பீட்​டின்​படி இத்​திட்​டத்​தின் ஆண்டு பரா​ம​ரிப்​புச் செலவு 20.79 லட்​சம். இத்​திட்​டத்​தில் வீடு​களை இணைக்க வீடு​க​ளுக்கு தலா ரூ.5 ஆயி​ரம் முதல் ரூ.15 ஆயி​ரம் வரை மக்​கள் வைப்​புத் தொகை செலுத்த வேண​டும்.    மாதம்​தோ​றும் ரூ.70 முதல் ரூ.100 வரை கட்​ட​ணம் செலுத்த வேண்​டும். வணிக நிறு​வ​னங்​கள் ரூ.10 ஆயி​ரம் முதல் ரூ.1.5 லட்​சம் வரை வைப்​புத் தொகை செலுத்த வேண்​டும். மாதக் கட்​ட​ணம் ரூ.140 முதல் ரூ. 1,200 வரை செலுத்த வேண்​டும் என்​றும் தெரி​விக்​கப்​பட்​டது. ​


பா ​தா​ள சாக்​க​டைத் திட்​டத்​துக்கு கூடு​தல் நிதி ஒதுக்​கு​வ​தற்கு நக​ராட்​சிக் கூட்​டத்​தில் மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் உறுப்​பி​னர்​கள் ஆனந்த்,​ சரளா,​ காங்​கி​ரஸ் உறுப்​பி​னர் சர்​தார்,​ அ.தி.மு.க. உறுப்​பி​னர் குமார் ஆகி​யோர் எதிர்ப்பு தெரி​வித்​த​னர். 60 சதம் பணி​கள் முடிந்து விட்​ட​தா​கக் கூறு​கி​றார்​கள்.   முடி​வுற்ற பணி​களே திருப்​தி​யாக இல்லை. அப்​படி இருக்க மீதம் உள்ள 40 சதம் பணிக்கு ரூ.26 கோடி கூடு​த​லாக ஒதுக்​கு​வது முறை​யல்ல என்று அவர்​கள் தெரி​வித்​த​னர். ​÷ப ​தில் அளித்​துப் பேசிய நக​ராட்​சித் தலை​வர் து.தங்​க​ராசு,​ திட்​டத்​தில் பல மாறு​தல்​களை அரசு செய்து உள்​ளது. ரூ.3 கோடி​யில் சுத்​தி​க​ரிப்பு நிலை​யம் கட்ட திட்​ட​மி​டப்​பட்டு இருந்​தது. தற்​போது ரூ.12 கோடி​யில் கட்ட திட்​ட​மி​டப்​பட்டு இருக்​கி​றது. கழிவு நீரை நவீன முறை​யில் சுத்​தி​க​ரிக்க முடிவு செய்து இருக்​கி​றார்​கள்.   எனவே திட்ட மதிப்​பீடு உயர்ந்து இருக்​கி​றது என்​றார். ​

இதை ஏற்க மறுத்த மார்க்​சிஸ்ட் உறுப்​பி​னர்​கள் ஆனந்த்,​ சரளா ஆகி​யோர் கண்​க​ளில் கருப்​புத் துணி​யைக் கட்​டிக் கொண்டு,​ அவை​யின் முன்​னால் அமர்ந்​த​னர். அவர்ளை தி.மு.க. உறுப்​பி​னர்​கள் அங்​கி​ருந்து அப்​பு​றப்​ப​டுத்​தி​னர்.   இரு உறுப்​பி​னர்​க​ளும் அவை​யில் இருந்து வெளி​ந​டப்பு செய்​த​னர். இத​னால் அவை​யில் பர​ப​ரப்பு ஏற்​பட்​டது. ​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior