உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 03, 2009

குடி​யி​ருப்​போர் சங்க கூட்​ட​மைப்பு எதிர்ப்பு

​ கட​லூர்,​ ​ டிச. 2:​ 
 
                    கட​லூர் பாதா​ள சாக்​க​டைத் திட்​டத்​துக்கு ரூ.26 கோடி கூடு​த​லாக ஒதுக்​கீடு செய்​வது முறை​யல்ல என்று கட​லூர் நகர அனைத்து குடி​யி​ருப்​போர் நலச் சங்​கங்​க​ளின் கூட்​ட​மைப்பு எதிர்ப்பு தெரி​வித்து உள்​ளது.
 
             கூட்​ட​மைப்​பின் பொதுச் செய​லா​ளர் மு.மரு​த​வா​ணன் புதன்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​ கட​லூர் பாதா​ள சாக்​க​டைத் திட்​டத்​துக்​காக 150 கி.மீ. நீளச் சாலை​கள் தோண்​டப்​பட்டு பணி​கள் முடிக்​கப்​ப​டா​மல்,​ மக்​கள் கடு​மை​யாக பாதிக்​கப்​பட்டு உள்​ள​னர். போக்​கு​வ​ரத்து நெருக்​க​டி​யும் மக்​கள் சாலை​க​ளைப் பயன்​ப​டுத்த முடி​யாத நிலை​யும் ஏற்​பட்டு உள்​ளது. 18 மாதங்​க​ளில் முடிக்க வேண்​டிய பணி,​ ஆமை வேகத்​தில் நடந்து வரு​கி​றது. இத​னால் சாலை​க​ளில் ஏரா​ள​மான விபத்​து​கள் நிகழ்​கின்​றன. ​
 
 
இத்​திட்​டத்தை நிறை​வேற்​றும் குடி​நீர் வாரிய அதி​கா​ரி​கள் மற்​றும் நக​ராட்சி அதி​கா​ரி​க​ளின் செயல்​பா​டு​கள் கவலை அளிக்​கி​றது. ஒப்​பந்​தக்​கார்​கள் இத்​திட்​டத்தை நிறை​வேற்​றும் திற​னற்​ற​வர்​க​ளாக இருக்​கி​றார்​கள். ஒப்​பந்​தக்​கா​ரர் மனது வைத்​தால்​தான் கட​லூர் மக்​க​ளைக் காப்​பாற்ற முடி​யும் என்ற நிலை ஏற்​பட்டு உள்​ளது. ​
 
இந்த நிலை​யில் இத்​திட்​டத்​துக்கு அரசு ரூ.25.66 கோடி கூடு​த​லாக வழங்க நக​ராட்சி பரி​ந​து​ரைத்து உள்​ளது. ஒப்​பந்​தக்​கா​ரர் ஒப்​பந்​தப்​படி பணி​களை முடிக்​கா​மல்,​ கால​தா​ம​தம் செய்​வ​தும்,​ 50 சதம் பணி​கள்​கூட முடி​வ​டை​யாத நிலை​யில்,​ இந்​தக் கூடு​தல் நிதி ஒதுக்​கீடு செய்​துள்​ளது மக்​கள் மத்​தி​யில் சந்​தே​கங்​களை ஏற்​ப​டுத்தி உள்​ளது. ​
 
உ​டைக்​கப்​பட்ட சாலை​க​ளைச் செப்​ப​னிட ஒப்​பந்​தத்​தில் கூறப்​பட்டு உள்​ள​படி,​ ஒப்​பந்​த​தா​ரர் நெடுஞ்​சா​லைத் துறைக்​கும்,​ நக​ராட்​சிக்​கும் பணம் செலுத்தி இருக்​கி​றாரா?​ மழை​யால் பாதிக்​கப்​பட்ட சாலை​க​ளைச் செப்​ப​னிட நக​ராட்சி மற்​றும் நெடுஞ்​சா​லைத் துறை செல​விட்ட தொகை ஒப்​பந்​த​தா​ர​ரி​டம் பிடித்​தம் செய்​யப் பட்​டதா?​ மற்​றும் ரூ.40 கோடி செல​வில் நடந்​துள்ள பணி​கள் குறித்து,​ பணி​கள் வாரி​யாக மக்​க​ளுக்​குத் தெரி​விக்க வேண்​டும்.
 
வெ​ளிப்​ப​டை​யான அணு​கு​மு​றையை நிர்​வா​கம் ஏற்​ப​டுத்​து​வ​தன் மூலம்,​ ஒப்​பந்​தக்​கா​ரர் முறை​யாக செய்​ய​வில்லை என்​றால் நீதி​மன்​றத்தை நாடு​வது உள்​ளிட்ட நட​வ​டிக்​கை​களை மேற்​கொள்ள இருக்​கி​றோம் என்​றும் மரு​த​வா​ணன் செய்​திக் குறிப்​பில் கூறி​யுள்​ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior