உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 03, 2009

அனல்​மின் நிலை​யம் அமைப்​பதை எதிர்த்து ஆர்ப்​பாட்​டம்

பண்ருட்டி,​ டிச. 2:​ 
 
           கொள்​ளுக்​கா​ரன்​குட்​டை​யில் அனல்​மின் நிலை​யம் அமைக்க கிராம மக்​கள் எதிர்ப்பு தெரி​வித்​தால்,​ தலை​மை​யேற்று ஆர்ப்​பாட்​டம் நடத்​து​வேன் என ஒன்​றி​யக் குழுக் கூட்​டத்​தில் குழு தலை​வர் எழி​ல​ரசி ரவிச்​சந்​தி​ரன் கூறி​னார்.
 
          பண்​ருட்டி ஊராட்சி ஒன்​றி​யக் குழு​வின் சாதா​ரண கூட்​டம் அதன் தலை​வர் எழி​ல​ர​சி​ர​விச்​சந்​தி​ரன் தலை​மை​யில் புதன்​கி​ழமை நடை​பெற்​றது.÷கூட்​டத்​தில் நடை​பெற்ற விவா​தம்:​​எழி ​ல​ர​சன்:​​ மாளி​கம்​பட்டு உள்​ளிட்ட கிரா​மப் பகு​தி​யில் உள்ள தொடக்க மற்​றும் நடு​நி​லைப் பள்​ளி​கள் மிக மோச​மான நிலை​யில் மழைக் காலத்​தில் ஒழுகி மாண​வர்​கள் அமர்ந்து படிக்க முடி​யாத நிலை​யில் உள்​ளன. இப்​பள்​ளி​க​ளுக்கு இருக்​கை​கள் செய்து கொடுத்து மாண​வர்​கள் படிக்க வசதி ஏற்​ப​டுத்​தித் தர​வேண்​டும்.÷அ​னை​வ​ருக்​கும் கல்வி இயக்​கத்​தின் மூலம் மாளி​கம்​பட்​டில் ரூ.4.60 லட்​சம் செல​வில் கட்​டப்​பட்​டுள்ள கட்​ட​டம் 5 ஆண்​டு​க​ளா​கி​யும் திறக்​கப்​ப​டா​மல் உள்​ளது. இதை திறக்க நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்.
 
          எழி​ல​ரசி ரவிச்​சந்​தி​ரன்:​​ விரைந்து நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும்.÷பூரா ​மூர்த்தி:​​ இது​நாள் வரை சின்​ன​பு​றங்​கனி கிரா​மத்​துக்கு ஒரு சிமென்ட் சாலை வசதி கூடி செய்து தர​வில்லை. ஏன் என்று தெரி​ய​வில்லை.
 
             எழி​ல​ரசி ரவிச்​சந்​தி​ரன்:​​ விரை​வில் சிமென்ட் சாலை அமைக்க நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும். மாலா: ​​ எல்.என்.புரத்​தில் கட்​டப்​பட்ட கரும காரிய கொட்​ட​கைக்கு ஆன கூடு​தல் தொகை ரூ.2 லட்​சம்,​ 9 மாதங்​கள் ஆகி​யும் தர​வில்லை.÷எழி​ல​ரசி ரவிச்​சந்​தி​ரன்:​​ உரிய அதி​கா​ரி​களை ஆலோ​சனை செய்து பணம் அளிக்க நட​வ​டிக்கை எடுக்​கின்​றேன்.  
 
               கம்சலிங்​கம்:​​ ஒன்​றி​யக் கூட்​டத்​தில் கட​வுள் வாழ்த்து,​ தேசிய கீதம் பாடு​வ​தில்லை,​ வரும் கூட்​டம் முதல் பாட நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும். வேளாண்மை அலு​வ​ல​கத்​தில் இருந்து விவ​சா​யி​க​ளுக்கு மானி​யம் கிடைப்​ப​தில்லை. விதை,​ உரம் எது​வும் குறித்த காலத்​தில் அளிப்​ப​தில்லை. இது குறித்து மாவட்ட நிர்​வா​கத்​துக்கு அறிக்கை அனுப்ப வேண்​டும்.
 
              கொள்​ளுக்​கா​ரன்​குட்​டை​யில் அமை​ய​வுள்ள டேனக்ஸ் அனல்​மின் நிலை​யத்​தால் விவ​சா​யம் பாதிக்​கப்​ப​டும். முன்​னரே நெய்வேலி நிலக்​கரி நிறு​வ​னத்​தா​லும்,​ புதிய வீரா​ணம் திட்​டத்​தா​லும் தண்​ணீர் உருஞ்​சப்​பட்டு நிலத்​தடி நீர் அத​ல​பா​தா​லத்​துக்கு சென்​று​விட்ட நிலை​யில்,​ அனல் மின் நிலை​யம் அமைப்​பதை எதிர்க்​கின்​றேன்.
 
                எழி​ல ​ரசி ரவிச்​சந்​தி​ரன்:​​ கிராம மக்​கள் பாதிப்பு என்று கரு​தி​னால் நானே முன்​னின்று ஆர்ப்​பாட்​டம் செய்​தி​றேன் என கூறி​னார். ​
 
                 கூட்​டத்​ தில் வட்​டார வளர்ச்சி அலு​வ​லர் எஸ்.கல்​யாண்​கு​மார்,​ துணை வட்​டார வளர்ச்சி அலு​வ​லர் ஜி.இந்​தி​ரா​தேவி,​ பொறி​யா​ளர் பி.ஆனந்தி உள்​ளிட்ட பலர் கலந்​து​கொண்​ட​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior