உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 03, 2009

ஸ்ரீமுஷ்ணத்தில் மரக்கன்று நடும் விழா

ஸ்ரீமுஷ்ணம்:

                   ஸ்ரீமுஷ்ணம் சி.எஸ்.ஜெயின் கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மரக்கன்று நடும் விழாவை நடத்தினர். கல்வி நிறுவன செயலாளர் மகாவீர்சந்த் தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்சி துணை முதல்வர் அழகுதுரை வரவேற்றார். மருந்தாளுநர் கல்லூரி முதல்வர் அபிராமி, கல்வியியல் கல்லூரி முதல்வர் ராஜதுரை முன்னிலை வகித்தனர்.


     காவல்துறை குற்ற புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளர் கணேசன் மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்தார். கல்லூரி வளாகம், காவல்துறை வளாகம், பேரூராட்சி வளாகம் ஆகிய பகுதிகளில் மாணவர் கள் மரக்கன்றுகளை நட்டனர். விரிவுரையாளர் இசபெல்லா மரம் வளர்த்தல் அவசியம் பற்றி பேசினார். விரிவுரையாளர் கலைவாணன் நன்றி கூறினார். த.வீ.செ. கல்வி நிறுவனம் சார்பில் மரக்கன்று நடும் விழாவை சீத்தாலட்சுமி ஆதிவராகன் துவக்கப்பள்ளியில் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நடத்தினர். நிறுவன செயலாளர் செந்தில்நாதன் தலைமை தாங்கி னார். விரிவுரையாளர் சோமசுந்தரம் வரவேற்றார். ஆசிரியர் பயிற்சி முதல்வர் ஆறுமுகம் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன், சுரேஷ், ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவ&மாணவிகள் கலந்து கொண்டனர்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior