உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 05, 2009

சிதம்பரத்தில் பள்ளிவாசல் நிர்வாகத்தில் முறைகேடு: 2 பேர் மீது வழக்கு

சிதம்பரம், : 


            சிதம்பரம் பள்ளிவாசலில் முறைகேடு நடந்ததாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

                    சிதம்பரம் தொப்பை யன் தெருவை சேர்ந்தவர் செல்லப்பா என்கிற முகமது ஜியாவுதீன். இவர் லால்கான் பள்ளி வாசலில் முறைகேடுகள் நடப்பதாகவும், பள்ளி வாசலின் வக்பு வாரிய சொத்துக்களை பொறுப்பில் உள்ள இப்ராகிம் ஷா, அதீஸ்கான் ஆகிய இரு வரும் முறைகேடாக அனுபவித்து வருவதாகவும்,  இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிதம்பரம் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஈஸ்வர மூர்த்தி, இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் இப்ராகிம் ஷா, அதீஸ்கான் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior