உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 05, 2009

கிராமங்களில் நூலகம் அமைக்க முடிவு


சிதம்பரம்: 


       கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் அண்ணா மறு
மலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் நூலகம், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் புவனகிரியில் நடந்தது. 


         மாவட்ட உதவி திட்ட அதிகாரி சேகர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நீலகண்டன், ஜெயக்குமார், ஜமூனா, ராஜாராமன், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம், குமராட்சி, காட்டுமன்னார் கோவில் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், தொடக்க கல்வி அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். நூலகம் இல்லாத கிராமங்களில் உடனே நூலகம் அமைக்கவேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு  உதவி திட்ட அதிகாரி சேகர் உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior