உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 05, 2009

ஆசிரியர் பயிற்றுனர் விண்ணப்பம் கல்வி அலுவலகத்தில் விற்பனை முதன்மை கல்வி அலுவலர் தகவல்

கடலூர் : 

கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி விடுத்துள்ள செய்திக்குறிப் பில்  கூறியிருப்பதாவது;

          2009&10ம் ஆண்டிற் கான அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் காலியாக உள்ள 564 வட் டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள்  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டி தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள் ளனர். 

                  இத்தேர்விற்கான விண்ணப்பங்கள் கடலூர் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் வரும் 14ம் தேதி வரை(ஞாயிற்றுக்கிழமை தவிர) விற்பனை செய்யப்படுகிறது. விண்ணப்ப கட்டணம் ரூ.50 மட்டும். 

                        

                விண்ணப்பங்கள் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை விற்பனை செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் எஸ்சி ,எஸ்டி இனத்தவர்களுக்கு ரூ.150க்கான வங்கி வரவும் மற்ற இதர இனத்தவர்களுக்கு ரூ.300க்கான வங்கி வரவும் “தி சேர்மன் டீச்சர்ஸ் ரெக்ரூட்மென்ட் போர்ட் சென்னை&6 என்ற முகவரிக்கு பெற்று முதன்மை கல்வி அலுவலகத்தில் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். 


                           பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கடலூர் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டிய கடைசி நாள் 14ம் தேதி ஆகும். பிஏ, பிஎஸ்சி, பி.லிட் மற்றும் பிஎட் கல்வி தகுதி கொண்டவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior