உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 22, 2009

இலவச கண் பரிசோதனை முகாம்

 பண்ருட்டி, டிச. 21: 

                 பண்ருட்டி அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் சக்தி தொழிற் பயிற்சி மையம் இணைந்து, சக்தி ஐடிஐ வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாமை அண்மையில் நடத்தினர்.  

                       சக்தி ஐடிஐ., வினாயகா ஐடிஐ. மற்றும் சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 261 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பார்வை குறைபாடு உடைய 20 மாணவர்களுக்கு பரிசோதனை செய்து கண்ணாடி அணிவிக்கப்பட்டது.  

                      அகர்வால் கண் மருத்துவமனையை சேர்ந்த என்.ரேகா, எம்.பாத்திமாபேகம், அருள் ஆகியோர் பரிசோதனை செய்தனர். இதில் சக்தி ஐடிஐ., தலைவரும், முன்னாள் சட்ட மன்ற மேலவை உறுப்பினருமான அ.ப.சிவராமன், தாளாளர் ஆர்.சந்திரசேகர், இயக்குனர்கள் முன்னாள் கவுன்சிலர்கள் வி.பாலகிருஷ்ணன், டி.ஜி.ரவிச்சந்திரன், எஸ்.வி.ஜூவல்லரி உரிமையாளர் எஸ்.வைரக்கண்ணு, சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி தாளாளர் எம்.நடராஜன், என்.சம்மந்தர் ஆகியோர் முகாமில் கலந்துக்கொண்டனர். சக்தி ஐடிஐ., முதல்வர் கே.தேவநாதன் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior