உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 22, 2009

சிதம்பரம் வந்த ஆளுநருக்கு வரவேற்பு

 சிதம்புரம்,  டிச. 21: 
 
                  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 77-வது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்க ஆளுநர் சுர்ஜித்சிங்பர்னாலா ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் அண்ணாமலைநகர் விமான தளத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் வந்திறங்கினார்.  
 
                   அவரை கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் அஸ்வின்கோட்னீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி, துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன். பதிவாளர் எம்.ரத்தினசபாபதி ஆகியோர் பூச்சென்டு அளித்த வரவேற்றனர்.  
 
              பின்னர் ஆளுநர் துணைவேந்தர் பங்களாவிற்கு சென்று ஓய்வெடுத்தார். முன்னதாக ஆளுநர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சிதம்பரம் அண்ணாமலைநகர் வந்தார். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior