உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 22, 2009

கடலூரில் விஷக் காய்ச்சல் பரவுகிறது : மருத்துவமனையில் கூட்டம் அதிகரிப்பு

கடலூர்: 

                    கடலூரில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் விஷக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண் ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
கடலூரில் கடந்த ஒருவாரம் பெய்த தொடர் கன மழை காரணமாக பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக பாதாள சாக்கடைக்காக சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டதால் மழை நீர் ஓட வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனை வெளியேற் றவோ, கிருமி நாசினியான "பிளிச்சிங்' பவுடர் தூவ நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. போதாக்குறைக்கு நகரில் பன்றிகள் சுற்றித் திரிகின்றன.
 

              இதன் காரணமாக தேங் கிய நீரில் கொசு உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளதால் நகரில் விஷ மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சராசரியாக 500 பேர் புறநோயாளியாக சிகிச்சை பெறுவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு வாரமாக தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர். 

             நேற்று காலையிலேயே விஷ மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பாக காணப்பட்டது. கூட் டத்தை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவமனை ஊழியர்கள் அல்லாடினர்.
இதேபோன்று நகரில் பாதாள சாக்கடை திட்டத் திற்காக தோண்டிய பள் ளங்களில் விழுந்து காயமடைந்து சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருவதாக மருத்துவமனை ஊழியர்கள் கூறுகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior