உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 22, 2009

அமெரிக்காவிலிருந்து வந்த பார்சலால் கடலூரில் பரபரப்பு

கடலூர்:

                     கடலூர் அண்ணா விளையாட்டரங்கு பயிற்சியாளருக்கு அமெரிக்காவிலிருந்து வந்த மர்ம பார்சலால் பரபரப்பு ஏற்பட்டது,

                      கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் இறகுப்பந்து பயிற்சியாளர் வெங்கடேஷ். இவருக்கு நேற்று காலை அமெரிக்கா விலாசமிட்ட சிறிய அளவிலான அட்டை பெட்டி பார்சல் வந்தது. தனக்கு அமெரிக்காவில் தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்பதால், பார்சலை பிரிக்காமல் மாவட்ட விளையாட்டு அலுவலர் பத்மநாபனிடம் ஒப்படைத்தார். பார்சலின் மேல் "ரிலீஜியஸ் மெட்டீரியல்' என தலைப்பிட்டு இருந்ததால் ஏதேனும் வெடிகுண்டு பார்சலாக இருக்குமோ என அஞ்சி பார்சலை வெட்டவெளியில் தனியாக வைத்து விட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். கடலூர் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ பார்சலை பிரித்து பார்த்த போது உள்ளே இந்து மத சம்பந்தமான ஆன்மிக புத்தகங்கள் இருந்ததை கண்டு பெருமூச்சு விட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior