உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 22, 2009

இலவச 'டிவி', காஸ் வழங்காததால் இரு கிராமங்களில் சாலை மறியல்

பண்ருட்டி:

                         இலவச "டிவி', காஸ் வழங்காததை கண்டித்து இரு இடங்களில் நடந்த சாலை மறியலால் கட லூர்- பண்ருட்டி சாலை யில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. பண்ருட்டி அடுத்த  கீழ்கவரப்பட்டு ஊராட்சி யில் ஆண்டிப்பாளையம், புதுப்பாளையம், வடக்கு பாளையம், சாலை நகர் கிராமங்கள் உள்ளன. நேற்று முன்தினம் ஆண் டிப்பாளையம் பகுதியில் உள்ள ஆயிரம் வீடுகளுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கப்பட்டது.

                   இதனை அறிந்து ஆவேசமடைந்த கீழ்கவரப் பட்டு, புதுப்பாளையம் கிராம மக்கள் தங்கள் பகுதிகளுக்கு "டிவி' வழங்காமல் ஊராட்சி தலைவர் சக்கரத்தாழ்வார் தனது பகுதிக்கு மற்றும் "டிவி' மற்றும் காஸ் அடுப்பு வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டி நேற்று காலை 10.30 மணியளவில்  கடலூர்-பண்ருட்டி சாலையில் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய பள்ளி எதிரில் கீழ்கவரப்பட்டு பகுதி மக்கள் 100 பேர் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபோல் புதுப்பாளையம் பகுதி மக்கள் 100 பேர் கடலூர்-மாளிகைமேடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலூர்-பண்ருட்டி சாலை,  விழுப்புரம்-கடலூர் சாலையில் போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்த பண்ருட்டி தாசில்தார் பாபு , இன்ஸ் பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட் டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப் போது இலவச காஸ் இணைப்பு வழங்க குடும் பத்திற்கு 400 ரூபாய் கேட்பதாக குற்றம் சாட்டினர். மேலும், தங்கள் பகுதிக்கு உடனடியாக "டிவி', காஸ் அடுப்பு வழங்க வேண்டும் என்றனர். இலவச "டிவி'  மற்றும் காஸ் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார்  உறுதியளித் தார். அதனையேற்று 11.30 மணிக்கு மறியல் விளக்கிக் கொள்ளப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior