உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 30, 2010

அ.தி.மு.க. பிரமுகர் மீது தாக்குதல்: தி.மு.க.வினர் 11 பேர் மீது வழக்கு

கடலூர்: 

              கடலூர் அருகே அ.தி.மு.க. பிரமுகரைத் தாக்கியதாக, தி.மு.க.வினர் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

                      கடலூர் அருகே கே.ஆர். சாவடியைச் சேர்ந்தவர் அ.தி.மு.க. பிரமுகர் பழநிச்சாமி (48). அவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் உலகஅரசனுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. பழநிச்சாமி வியாழக்கிழமை மாலை செல்லஞ்சேரியில் இருந்து புதுவைக்குக் காரில் சென்று கொண்டு இருந்தார். காரை அவரே ஓட்டிச் சென்றார். செல்லசேரியைச் தாண்டி சிறிது தூரம் சென்றதும், உலகஅரசன் உள்ளிட்ட 11 பேர் பழநிச்சாமியின் காரை வழிமறித்தனர்.  அவர்கள் கார் கண்ணாடிகளை இரும்புக் குழாயால் அடித்து உடைத்தனர். பின்னர் பழநிச்சாமியை கத்தி மற்றும் இரும்புக் குழாயால் தாக்கிவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயம் அடைந்த பழநிச்சாமி கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.÷இது தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த உலகஅரசன், ராமு, ரவி, தனசேகரன் உள்ளிட்ட 11 பேர் மீது, ரெட்டிச்சாவடி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior