உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 30, 2010

வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா: கொடியேற்றத்துடன் துவங்கியது

குறிஞ்சிப்பாடி:

                வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 139வது தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று நடக்கிறது. கடந்த 22ம் தேதி முதல் தருமச்சாலை மற்றும் ஞானசபை மேடைகளில் மகாமந்திரம் ஓதுதல், திருஅருட்பா முற் றோதல் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு வள்ளலார் அவதரித்த மருதூரில் கிராம மக்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. காலை 10 மணிக்கு ஞான சபையில் பார்வதிபுரம் கிராம மக்கள் சன் மார்க்க கொடியை ஏற்றி தைப்பூச விழாவை துவக்கி வைத்தனர்.

                இன்று காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, மாலை 7 மணி, இரவு 10 மணி, நாளை காலை 6 மணி ஆகிய நேரங்களில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடக்கிறது. விழாவையொட்டி காலை 10 மணிக்கு மலிவு விலையில் திருஅருட்பா புத்தகம், மருதூர் தங்கம் விடுதி திறப்பு விழா நடக் கிறது. அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம் வரவேற்கிறார். இந்து அறநிலையத்துறை ஆணையர் சம்பத், அரசு செயலர் முத் துசாமி, இணை ஆணையர் தங்கராஜ் முன்னிலை வகிக்கின்றனர். அமைச் சர்கள் பன்னீர்செல்வம், பெரியகருப்பன் ஆகியோர் புதிய கட்டடங்களை திறந்து வைக்கின்றனர்.
                   எம்.பி., அழகிரி, எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், தொழிலதிபர் பொள் ளாச்சி மகாலிங்கம், குருகுலப் பள்ளி தாளாளர் செல் வராஜ், என்.எல்.சி., சேர் மன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை சத்தியஞான சபை நிர்வாக அதிகாரி நாகராஜன் செய்து வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: தைப்பூச தரிசனத்தை காண லட்சக்கணக் கான மக்கள் வருவர் என்பதால் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் தலைமையில் ஐந்து டி.எஸ்.பி.,க்கள், 16 இன்ஸ்பெக்டர்கள், 60 சப் இன்ஸ்பெக்டர்கள், 215 பெண் போலீசார், 325 ஆண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை, வேலூர், திருச்சி, கோவை, தஞ்சாவூர், காரைக்கால் உட்பட பல பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சுகாதாரத்துறை சார்பில் இரண்டு டாக்டர் கள் கொண்ட மொபைல் மருத்துவமனை திறக்கப் பட்டுள்ளது.

 நாளை இசை விழா: 

                       வட லூரில் திருஅருட்பா இசை சங்கம் சார்பில் நாளை (31ம் தேதி) இசை விழா நடக்கிறது. அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்குகிறார். சீர்காழி சிவசிதம்பரம், வள்ளலார் குருகுலம் பள்ளி தாளாளர் செல்வராஜ் முன்னிலை வகிக்கின்றனர். சிவகாமசுந்தரி குத்துவிளக்கு ஏற்றி வைக்கிறார். கடலூர் அரசு இசைப் பள்ளி மாணவர்களின் மங்கள இசை, ஆசிரியர் ராமானுஜம் குழுவினரின் மகாமந்திரம் ஓதுதல் நடக்கிறது. காலை 11 மணிக்கு சிவசிதம்பரம் குழுவினரின் இசை நிகழ்ச்சியும், ராஜகோபால் அரிமளம் பத்மநாபன், மழையூர் சதாசிவம் குழுவினர் மற்றும் திரைப்பட இசையமைப்பாளர் கங்கை அமரன் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. என்.எல்.சி., சேர்மன் அன்சாரி, இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் பிச்சாண்டி, தென்னக பண்பாட்டு மைய உதவி இயக்குனர் முத்து, ஊரன் அடிகளார் உள்ளிட்டோர் பங்கேற் கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior