உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 30, 2010

கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் முப்பெரும் விழா

சிதம்பரம்:

                        சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையம், கடல்வாழ் உயிரியல் அறிவியல் புலமாக நிலை உயர்த்தப்பட்டதை முன்னிட்டு அதிநவீன நூலகம் திறப்பு விழா, அதிநவீன ஆராய்ச்சிக்கூடம் அடிக்கல்நாட்டு விழா, கடல்வாழ் உயிரியல் மருத்துவப் பரிசோதனைக்கான விலங்கின ஆராய்ச்சிக் கூடம் அடிக்கல்நாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

                      விழாவில் சென்னை செட்டிநாடு மருத்துவ நகரத்தின் துணைத் தலைவரும்,  பல்கலை. ஆளவை மன்ற உறுப்பினருமான எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா பங்கேற்று அதிநவீன நூலகத்தை திறந்து வைத்தார். பின்னர் புதிய அதிநவீன ஆராய்ச்சிக்கூடம். மருத்துவப் பரிசோதனைக்கான விலங்கின ஆராய்ச்சிக்கூடம் ஆகியவற்றை திறந்து  வைத்துப் பேசினார்.

அவர் பேசியது: 

                     பரங்கிப்பேட்டையில் 49 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் கடல்வாழ் உயிரின உயராய்வு மைய ஆராய்ச்சிப் பணிகளும், கல்விச்சேவையும் பாராட்டுதற்குரியது. இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மத்திய, மாநில மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெற்ற நிதி ஆதாரங்களைக் கொண்டு 44 ஆராய்ச்சிப் பணிகளை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் வாழும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் அலங்கார மீன் வளர்ப்பு, கடல் பாசி வளர்ப்பு உள்ளிட்ட பல சிறு தொழில்நுட்பங்களை இலவசமாக இம்மையத்தின் ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது பாராட்டுக்குரியதாகும் என முத்தையா கூறினார்.விழாவில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தலைமை வகித்துப் பேசுகையில் கடல்வாழ் உயிரியல் அறிவியல் புலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 10வது புலமாக திகழ்கிறது என்றார். பதிவாளர் எம்.ரத்தினசபாபதி வாழ்த்துரையாற்றினார். கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குநர் டி.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் மற்றும் புல முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior