உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 30, 2010

வெலிங்டன் ஏரிக் கரை சீரமைப்பு பணி செப்டம்பரில் முடியும்: அன்பழகன்

திட்டக்குடி:

                   திட்டக்குடி வெலிங் டன் ஏரிக் கரை சீரமைப்பு பணிக்காக 10 கோடி ரூபாய் செலவிடப்பட் டுள்ளதாக, சென்னை தலைமை பொறியாளர் அன்பழகன் கூறினார். திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் ஏரிக் கரை 20 கோடி ரூபாய் செலவில் சீரமைக் கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பொதுப்பணித் துறை (பாசனப் பிரிவு) சென்னை மண்டல தலைமை பொறியாளர் அன்பழகன் நேற்று மாலை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் பணி விபரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் அவர்  கூறியதாவது:

                     வெலிங்டன் ஏரிக் கரை சீரமைப்பு பணிக்கு ஒதுக்கப்பட்ட 20 கோடியில் இதுவரை 10 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

                  800 மீட்டர் கரை சீரமைப்பு பணியில் நீர்கசிவு தடுப்பு சுவர் 640 மீட்டர், நீர்வடிகால் 600 மீட்டர், கருங்கல் தடுப்புச்சுவர் 750 மீட்டர், 4.5 அடி உயரத்தில் நீர்புகா களிமண் பகுதி 400 மீட்டர், 1 அடி உயரத்தில் வெளிப் புற மண் பகுதி 150 மீட்டருக்கு பணிகள் முடிவடைந்துள்ளது. ஒட்டுமொத்த பணிகளை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது.இந்த பணி கிராம மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் மாதிரி தோற்றம் 15 நாளில் அமைக்கப்படும்.வீராணம் ஏரியிலிருந்து சென்னை மக்களின் குடிநீருக்காக 70 முதல் 77 கன அடி வரை தண்ணீர் எடுக் கப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல்- ஜூன் மாத இறுதி வரை இப்பணி நடைபெறும் என்றார். பேட்டியின் போது செயற்பொறியாளர் சின்னராஜ், உதவி செயற்பொறியாளர்கள் நஞ்சன், பிரேம் குமார், நாகராஜ், பாசன சங்க தலைவர்கள் கொத் தட்டை ஆறுமுகம், வேணுகோபால், மருதாச்சலம், சேலம் மாவட்டம் சிறு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் தங்கராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior