உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 30, 2010

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

சிதம்பரம்: 

               சிதம்பரத்தை அடுத்த புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

                    இந்நிகழ்ச்சியில் சுமார் 100 மாணவர்கள் பங்கேற்று பள்ளியில் தாம் படித்த வகுப்பறைகள் மற்றும் விளையாட்டுத் திடலையும் சுற்றிப்பார்த்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு  மகிழ்ந்தனர். பின்னர் பள்ளியில் தற்போது படிக்கும் மாணவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து கல்வி வளர்ச்சிக்கும், பள்ளி வளர்ச்சிக்கும் உதவி செய்வதாக உறுதியளித்தனர். மேலும் தமக்கு கல்வி புகட்டிய 12 ஆசிரியர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கி வாழ்த்து பெற்றனர்.÷பின்னர் முன்னாள் மாணவர்கள் சேர்ந்து புவனகிரி சங்கமம் என்ற அமைப்பை  ஏற்படுத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர். புதிய நிர்வாகிகள்: தலைவர்- கிரீடு தொண்டு நிறுவனச் செயலர் வி.நடனசபாபதி, துணைத் தலைவர்- சா.ராபர்ட் புருஷோத்தமன், பொதுச் செயலாளர்- ஜி.உதயசூரியன், பொருளாளர்-எம்.ஆறுமுகம், இணை பொதுச்செயலாளர் டி.பாலசந்தர், செயலாளர்கள்- அண்ணாஜோதி, சரவணன், ஞானவள்ளல், கண்ணன், வெங்கடேசன். அன்றைய தினமே புவனகிரி சங்கமம் அமைப்பு சார்பில் பள்ளிக் கல்வி வளர்ச்சிக்காக ரூ.4 லட்சம் நிதி திரட்டப்பட்டது. கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் போதிக்க அறிவியல் பட்டதாரி ஆசிரியர் இல்லாததால் அவதியுற்றனர். 

                      மாணவர்கள் கோரிக்கைக்கு இணங்க இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் உடனடியாக 2 ஆசிரியர்களை மாதம் ரூ.4 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் தாற்காலிகமாக பணியமர்த்த தலைமை ஆசிரியர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior