உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 30, 2010

திட்டக்குடி அருகே பள்ளிக்குச் சென்ற 5 மாணவ, மாணவியர் மாயம்

கடலூர்: 

                    திட்டக்குடி அருகே பள்ளிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற 3 மாணவிகள் மற்றும் 2 மாணவர்களை வியாழக்கிழமை முதல் காணவில்லை. 

                   திட்டக்குடி அடுத்த வேப்பூர் அருகே உள்ள ஐயனார் பாளையத்தைச் சேர்ந்த கொண்டையன் மகள் தேவி (14), ஐயப்பன் மகள் ரம்யா (14), செல்வராஜ் மகள் மகேஸ்வரி (13), தங்கவேல் மகன் சதீஷ் (15), பழநிச்சாமி மகன் பிரபாகரன் (13). வேப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சதீஷ் 10-ம் வகுப்பும், ரம்யா, தேவி, ஆகியோர் 9-ம் வகுப்பும், மகேஸ்வரி 8-ம் வகுப்பும், பிரபாகரன் 7-ம் வகுப்பும் படிக்கிறார்கள்.வியாழக்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்குச் செல்வதாகக்கூறி, வீட்டில் இருந்து புறப்பட்டனர். ஆனால், அவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. மாலையில் வீடுகளுக்கும் திரும்பவில்லை. மாணவ மாணவியரின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே வெள்ளிக்கிழமை மேற்கண்ட மாணவ, மாணவியரின் பெற்றோர் வேப்பூர் காவல்  நிலையத்தில் தனித்தனியாகப் புகார்களை அளித்தனர். போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, மாணவ, மாணவியரைத் தேடி வருகிறார்கள். மாணவ, மாணவிரை யாராவது கடத்திச் சென்றனரா அல்லது அவர்களாகவே எங்காவது சென்றனரா என்று தெரியவில்லை. திட்டக்குடி போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோ வேப்பூர் சென்று பெற்றோர்களைச் சந்தித்து விசாரணை நடத்தினார். இச்சம்பவம் திட்டக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior