உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 30, 2010

கடலூர் கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்

கடலூர்:

                  கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பயிலும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்தனர்.  அரசுக் கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் அடிப்படை வசதிகள் மோசமாக இருப்பதைக் கண்டித்தும், தரமான உணவு வழங்கக் கோரியும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். பின்னர் இந்திய மாணவர் சங்க கடலூர் மாவட்டத் தலைவர் டி.அரசன், துணைத் தலைவர் எஸ்.சிவபாலன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது: விலைவாசி உயர்வு காரணமாக ஏற்கெனவே மோசமான உணவு வழங்கப்பட்டு வந்த அரசுக் கல்லூரி விடுதிகள் தற்போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. பெரும்பாலான உணவு விடுதிகளில் உணவுப் பட்டியலின்படி உணவு வழங்கப்படுவதில்லை.  விலைவாசி உயர்வு காரணமாக விடுதிகளில் வழங்கப்படும் உணவில் பருப்பு காய்கறிகள் குறைவாக உள்ளன. அரிசியின் தரமும் மோசமாக உள்ளது. 

                    இதனால் மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சராசரி கலோரி உணவு கிடைப்பதில்லை. மாணவர் விடுதிகளுக்கு அரசு வழங்கும் தொகை, தரமான உணவு வழங்கப் போதுமானதாக இல்லை. கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர் விடுதிகளில் கழிப்பிட வசதி போதுமானதாக இல்லை. ÷விடுதி சுகாதாரமாக இல்லை என்றும் மனுவில் கூறப்பட்டு உள்ளது. அட்டவணைப்படி உணவு வழங்கப்படவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior