உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 12, 2010

கடலூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் 'ஏசி' வரிசை விரைவில் துவக்கம்

கடலூர் :

                     கடலூரில் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு "ஏசி' வரிசை விரைவில் துவங்கப்படவுள்ளது.

                     புதிய வாகனம் வாங்குபவர்கள் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து அதற்குரிய பதிவெண்ணை வாகனங்களில் எழுத வேண்டும். கடலூர் மாவட்டத்தில் "ஏபி'., வரிசையில் பதிவெண்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வரிசைக்கும் பத்தாயிரம் எண்கள் வழங்கப்படுகிறது.இந்த வரிசையிலேயே பிடித்த கவர்ச்சிகரமான 6666, 9999 போன்ற எண்கள் வாங்க வேண்டும் என்றால் அரசுக்கு 20 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். இது போன்ற எண்களை அரசு துறை வாகனங்கள் கட்டணம் செலுத்தி வாங்குவது வழக்கம். சாதாரண எண்களில் விரும்பிய எண்களை பெற 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தி பெற வேண்டும்.ஏஏ, ஏபி, ஏசி. ஏடி நான்கு வரிசையில் உள்ள எண்களை பெற 30 ஆயிரம் செலுத்த வேண்டும். "ஏஇ' வரிசையில் ஒரு எண்ணை தேர்வு செய்ய 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். தற்போது "ஏபி' வரிசை முடிவுறும் தருவாயில் உள்ளது. விரைவில் "ஏசி' வரிசை துவங்கப்படவுள்ளன. அதனால் ஏற்கனவே "ஏபி' வரிசையில் கேட்காத கவர்ச்சிகரமான எண்கள் தற்போது பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior