உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 12, 2010

மணல் அல்ல தடை: ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்

பண்ருட்டி :

                       திரிமங்கலம் மணல் குவாரியில் மணல் எடுப்பதை தடைவிதிக்க வேண்டும் என அண்ணாகிராம ஒன்றியக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை�ற்றப்பட்டுள்ளது.அண்ணாகிராமம் ஒன்றியக்குழு கூட்டம் சேர்மன் கவுரி தலைமையில் நேற்று நடந்தது. பி.டி.ஒ.க்கள் மனோகரன், தமிழரசி முன்னிலை வகித்தனர். துணை சேர்மன் சம்மந்தம், பொறியாளர் பாலகுமரன், வேளாண் அலுவலர் சந்திராசு, துணை வேளாண் அலுவலர் தாமேதரன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் அ.தி. மு.க., கவுன்சிலர் வீரமணி பேசுகையில், எனதிரிமங்கலம் மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றி வரும் லாரிகள் கள்ளிப் பட்டு, திருத்துறையூர், கண்டரக்கோட்டை உள்ளிட்ட 8 கிராமங்கள் வழியாக வருகிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் அரசு டவுன்பஸ் செல்ல முடியாமல் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் மணல் லாரிகள் கிராமங்களில் வருவதை தடை செய்ய வேண்டும் என்றார்.துணை சேர்மன் சம்பந்தம்(அ.தி.மு.க.,) பேசுகையில், பெண்ணையாற்றில் விதிகளை மீறி மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கும். ஆகவே ஒன் றிய பகுதியில் பெண்ணையாற்றில் மணல் எடுக்கக்கூடாது என ஏகமனதாக தீர் மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

                         இதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் தீர்மானம் நிறைவேறியது.அ.தி.மு.க., கவுன்சிலர் செல்வராசு பேசுகையில், வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளது. குடிநீர்மேல்நிலை தொட்டிகள் பராமரிக்க வேண்டும். கிராமங்களில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றார்.அ.தி.மு.க., கவுன்சிலர் சக்கரவர்த்தி பேசுகையில், எம்.எல்.ஏ., நிதியில் அமைக் கப்பட்ட சோளார் விளக்குகள் பராமரிப் பின்றி வீணாகிறது. தொகுப்பு வீடுகள் ஒதுக்கவில்லை என்றார். தி.மு.க., கவுன்சிலர் வாசுகி பேசுகையில் அலுவலக செலவு கணக்கு தீர்மானம் நிறைவேற்ற மட்டுமே நாங்கள் உள்ளோம். மற்றபடி நாங்கள் கூறும் எந்த பணியையும் அதிகாரிகள் செய்வதில்லை என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior